எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள்.
எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு
என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி
காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும்
சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின்
நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில்
தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் கலங்கிய கண்களோடு
என் மேலிரண்டு சட்டை [...]
ஆகஸ்ட், 2009 க்கான தொகுப்பு
கடைசி பக்க கிறுக்கல்கள்-4
Posted in Adaleru, Imagination, life, love, கவிதை, காதல், நட்சத்திரப் பதிவு, நினைவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அன்பு, கவிதை, காதல், நினைவு, புனைவு, வாழ்க்கை, வாழ்த்து, life style, love, poem on ஆகஸ்ட் 22, 2009 | 28 மறுமொழிகள் »
கடைசி பக்க கிறுக்கல்கள்-3
Posted in Adaleru, கவிதை, நினைவு, மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அண்ணா, அன்பு, அப்பா, கிறுக்கல், நினைவு, பூனை, மொக்கை, love, poem on ஆகஸ்ட் 11, 2009 | 10 மறுமொழிகள் »
இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்
அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்
எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்
நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்
ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்
செம்பட்டயன் என்றே அழைப்பார்
பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று
விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி
இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-2
Posted in Adaleru, Imagination, love, காதல், மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, கிறுக்கல், நினைவு, புனைவு, பேச்சிலர், life style on ஆகஸ்ட் 6, 2009 | 9 மறுமொழிகள் »
காலை தொடங்கி E.C.R கடற்கரை சுற்றி
மடி மீதமர்ந்து ஐஸ் குச்சி பரிமாறி
அருகில் இருந்து I Love You SMS அனுப்பி
நேற்றே பதிவு செய்த திரைப்படம் பார்த்து
ஒரு கையில் சிகரெட்டுடன் உன் கை பற்றி
யாருமற்ற மாலை நேர கடற்கரை நடை பழகி
வினையூக்கி சொன்னது போல டிப்ளோமெடிக்காய்
புவியீர்ப்பை மீறிய முத்தம் கொடுத்து
இறுக கட்டி பிடித்த நீண்ட தூர இரு சக்கர
வாகன பயணம் முடித்து விடுதி வாசலில் இறக்கி
விட்டபின் [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-1
Posted in Adaleru, Imagination, life, love, கம்ப்யூட்டர், கவிதை, காதல், மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, காதல், கிறுக்கல், சோகம், நினைவு, புனைவு, பேச்சிலர், மொக்கை, வாழ்க்கை, love, sad on ஆகஸ்ட் 5, 2009 | 8 மறுமொழிகள் »
அவள் புகைப்படம் பார்த்தே ஆக
வேண்டும் என்ற கன நேரத்தில்
பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல்
கண்டுபிடித்து , அவள் கணவனுடன்
எடுத்துக்கொண்ட புகைபடங்களை
திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின்
அணைந்து போனது மின்சாரம், அவசரமாய்
கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த
காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு
காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து
தட்டு கழுவி உண்டு முடித்த பின்
நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

















