பெப்ரவரி, 2010 க்கான தொகுப்பு

யாருமற்ற கறுகறுத்த பின்னிரவுகளில் கவிதை வரிகள் எளிதில் கிடைத்து விடுகின்றன நீ இருக்கும் இரவுகளின் நீட்சி நவீனத்துவ விரிப்புகளில் சிக்கி என்னை ஆகடியம் பண்ணுகிறது நீண்ட அமைதியில் எப்போதும் என்னை நோக்கியே முடுக்கி விடுகிறாய் உனதன்பின் ஸ்பரிசங்களை தினசரி மதிய உணவிலும் அடுத்தடுத்த அழை பேசி விசாரிப்புகளிலும் வேலைக்கு சென்ற காலை பொழுதுகளில் விரிப்புகளை உதறுகையில் இருக்கலாம் கடைசி இரவில் நீ கொடுத்த நீண்ட முத்தமும் , எழுதி முடிக்காத சில கவிதை வரிகளும். If you [...]

கடந்த வாரம் பொள்ளாச்சி சென்றிருந்தேன். சுழி மாற்று இலக்கிய களத்தின்  18-ம் அமர்வு சுழி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய அமர்விற்கான  பேச்சாளர் நளினி ஜமீலா. நளினியிடம்  தனியே உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னால் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான நளினியின் பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் பெயர் உண்மையானதா இல்லை புனைப் பெயரா ? (புன்னகைத்தவாறே என்னுடன் கலந்துரையாட உங்களைப் போன்ற இளைஞர்கள் வருவது சந்தோஷத்திற்குரியது என்றார்). இது என்னுடைய உண்மையான பெயர்தான். நான் இந்துவாக இருந்து [...]