April, 2010 க்கான தொகுப்பு

கருவரையில் வெளியேறி இருளின் நேர் கோட்டில் மிதக்கிறது ஆதாமின் எச்சம் எல்லா உடல் விற்பவளின் டயரி குறிப்புகளும் தாங்கி நிற்கும் எச்சத்தின் விளிம்பு நிலை. பின் மாலை பொழுதுகளில் மரணித்தவனை எழுப்பிக்கேட்டால் ஒரு வேளை தெரியலாம் பாவத்தின் அமைப்பு சாரா கொள்கையும் கடவுளின் இரண்டாம் வருகையும் If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]

நிலா ரசிகனின் பாவனைப்பெண் கவிதையை தனிமையில் அமர்ந்து  நேற்று படித்தேன். கவிதை வரிகளில் என்னமோ வசியம் வைத்திருக்கிறார்  இவர். படித்ததும் பிடித்துப்போன கவிதை இங்கே. அன்பின் கண்ணாடி தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை ஒரு மழைத்துளியாக்கி உன்னிடம் கொண்டுவருகிறேன். கடலடியில் நகரும் ஆழ்ந்த மெளனத்துடன் என்னை எதிர்கொள்கிறாய். அறுந்து விழுகின்ற சொற்களுடன் தடுமாறும் என் கரம் பற்றுகிறாய். உனக்கென நான் கொணர்ந்த மழைத்துளி கடலாகி நம்மைச் சூழ்கிறது. தெரிந்தே தவற விடுகிறோம் நம் மகத்தான அன்பின் கண்ணாடியை. உனக்கும் [...]

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர். மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு [...]