சத்தம்மின்றி
கசிந்து கொண்டிருந்தது இரவு,
வெளியெங்கும் பெய்ய
தொடங்கியது அயோடைட் மழை ,
ஏணியில் ஏறிகொண்டிருக்கிறான்
பூமியின் கடைசி மனிதன்,
நாய்களற்ற தெருவில்
குரைத்துக்கொண்டிருக்கின்றன
எலக்ட்ரானிக் பொம்மைகள் ,
எடையற்று காற்றில்
மிதந்து கொண்டிருக்கிறேன் நான் ,
“நிலவிற்கு வருக” பெயர் பலகையை
துடைத்துக்கொண்டிருக்கிறாள்
யாருமற்ற அனாதை சிறுமி.



















nice
Awesome!
nanba un kavithaikal anaithum arumai, ean vaalthukal, valarga un ilakiyam
Suajthavoda science fiction padicha mathiri irukku… Arumai
அருமை