ஜனவரி, 2011 க்கான தொகுப்பு

புகைப்படம்

Posted: ஜனவரி 22, 2011 in கவிதை, தமிழ், வாழ்க்கை
குறிச்சொற்கள்:,

ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால் அவருடைய ஆகச்சின்ன வயது புகைப்படத்தை  பார்ப்பது -‍ அ.முத்துலிங்க‌ம் என்னுடைய சிறு வயது புகைப்படம் ஒன்று வீட்டில்  இருக்கிறது.வீட்டுக்கு செல்லும் போது எப்போதாவது அதை பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தில் இருக்கும் முகத்துடன் கண்ணாடியில் என்னை பார்த்ததாக நியாபகமே இல்லை. அந்த புகைப்படத்தை எடுக்கும் போதெல்லாம் அம்மா பழைய கதைகள் எதாவது ஒன்றை சொல்லதொடங்குவாள். புகைப்படத்தில் நான் போட்டிருக்கும் பச்சை உடை, போட்டோ பிடித்த‌ நாள், அன்று காலையில் நடந்தது என்று நினைவில் [...]

  பால்ய வயது நியாபங்கள் எப்போதுமே மனதை லயிப்பிற்குள்ளாக்குபவை. நகரத்தின் இத்தனை சுகங்களை அனுபவித்து விட்டாலும் கிராமம் இன்னும்  ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வீதம்பட்டி. அங்கே நடக்கும் கோயில் திருவிழா பிரசித்தமானது. திருவிழாவின் போது நடத்தும் தெருக்கூத்து, நாட்டியம் இவைகளுக்காகவே திருவிழா சென்ற நாட்கள் அவை. இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய நடக்கும், புழுதி படிந்த கால்களுடன் அவர்கள் ஆடிய நடனமும், வண்ண விளக்குகளால் நிறைந்த [...]

அவள்

Posted: ஜனவரி 18, 2011 in அடலேறு, பெண்
குறிச்சொற்கள்:,

நூற்றாண்டின் வலியை அனுபவித்துவிட்டாள் அவள் உதிர்வ‌த‌ற்கு த‌யாராய் திர‌ண்டிருக்கிறது வருடத்தின் முதல் க‌ண்ணீர்துளி சிற‌குக‌ள‌ற்ற‌ தேவ‌தை மெல்ல‌ நுழைகிறாள் தனி அறையில் அவ‌ளின் பேரிரைச்சல் க‌ண்டு ந‌டுங்கிய‌ப‌டி வெளியேறுகிற‌து அமைதியின் க‌டைசி சொல் நீரால் சூழ்ந்த வீடு உடைவது கண்டு வீறிட்டு அழுகிறாய் நீ வெளிச்ச‌ம் க‌ண்டால் ந‌டுங்குகிற‌து உன்னுடல் இனி உன் த‌லை பிடித்திழுக்கும் கைக‌ளை கொண்டு மெல்ல‌ வெளியேற‌லாம் நீ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் If you enjoyed this post, make sure [...]

ஐரின் பாப்பா

Posted: ஜனவரி 14, 2011 in irene
குறிச்சொற்கள்:, ,

தலையை சாய்த்து சாய்த்து கதை சொல்லுவாள் ஐரின் பாப்பா அவ‌ள் க‌தையில் வ‌ரும் எல்லா வில‌ங்குக‌ளும் பேசும் திற‌ன் கொண்ட‌வை நரி புலியிடம் சொல்லியதாம் புலியே புலியே என்னை விட்டுவிடு நான் பாவ‌ம். ஆமாம் நீ பாவம் உன்னை நாளைக்கு சாப்பிடுகிறேன் என புலியும் போய்விட்டதாம். புலி எங்கே போனது என்று ஒரு போதும் அவள் சொல்வதில்லை புலி மீண்டும் எப்போதாவது வரலாம் வராமலும் போகலாம் அப்படியே வ‌ந்தாலும் நாளை சாப்பிடுவ‌தாய் சொன்ன‌ நரியை மறந்தே போயிருக்கும்  [...]

பொங்கலுக்கு ஊருக்கு வரும் போது கூடவே பயணிக்கிறது உன் பட்டு தாவணியும் ஊடுருவும் பார்வையும் சுற்றம் பார்த்து நீ தரும் திருட்டு முத்தமென‌ -0O0- உன்னுடைய‌ நீலமும் வெள்ளையும் கலந்த தாவ‌ணியில் உள்ள ஜரிகை பானை அது தான் உச‌த்தி என‌ பெருமை பேசி திரிகிற‌து பொங்கல் பானைக‌ளிட‌ம் -0O0- சந்தையில் நீ ஒரே ஒரு பானையை எடுத்துக்கொண்டு மற்றவைகளை நிராகரித்தது அவமானத்தின் உச்சமாம். குறைப‌ட்டுக்கொள்கிற‌து அழகான பானைகள் -0O0- டேய் அதென்ன‌மோ முத்தப் பொங்க‌லாம் அப்ப‌டின்னா [...]

புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது. நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு [...]