நூற்றாண்டின் வலியை
அனுபவித்துவிட்டாள்
அவள்
உதிர்வதற்கு தயாராய்
திரண்டிருக்கிறது
வருடத்தின் முதல் கண்ணீர்துளி
சிறகுகளற்ற தேவதை மெல்ல
நுழைகிறாள் தனி அறையில்
அவளின்
பேரிரைச்சல் கண்டு
நடுங்கியபடி வெளியேறுகிறது
அமைதியின் கடைசி சொல்
நீரால் சூழ்ந்த வீடு
உடைவது கண்டு
வீறிட்டு அழுகிறாய்
நீ
வெளிச்சம் கண்டால்
நடுங்குகிறது உன்னுடல்
இனி
உன் தலை பிடித்திழுக்கும்
கைகளை கொண்டு
மெல்ல வெளியேறலாம்
நீ
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
















சொல்ல முடியாத உணர்வுகளை ஏற்படுத்தும் கவிதை!
பிறப்பை ஒரு வார்த்தையில் அடக்க முடியாத உன்னதமான தருணம் தானே. பின்னூட்டத்திற்கு நன்றிங்க எஸ். கே
very nice da nanba
Thank you raja
வலியையும், மகிழ்வையும், நொடிப்பொழுதில் மாற்றிப்போடும் இயற்கை வினோதமல்லவா பிறப்பு!!
நிச்சயமாக ஜனா, மனைவியை பிரசவ அறைக்கு அனுப்பிவிட்டு வெளியில் காத்திருக்கும் கணவன் அறிவான் அதன் வலியை.
mika mida nadrayirukkirathu…
Thank you Alamelu
என்னை கொஞ்சம் பின் நோக்கி பார்கவைத்தது கவிதை, அது முழுக்க முழுக்க என் அனுபவமே !!…
வாழ்த்துக்கள் தம்பி
Thank you Anna.