Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘கவிதை’ பகுப்புக்கான தொகுப்பு

கதை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில்  இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த  புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது [...]

முழு பதிவையும் வாசிக்க »

பள்ளி முடிந்து வரும்
மாலை  நேரங்களில் எனக்கான
நொறுக்குத்தீனி
எடுத்து வைப்பாயே
அதற்காகவேனும்
எனக்கான தட்டு கழுவியும்
சட்டை தேய்தும் பின்
நவீனத்துவ அன்பு
காட்டுவாயே
அதற்காகவேனும்
எங்க அண்ணா பின்னிவிடற
ஜடையே அழகு தான்
என செல்வியிடம்
சொல்லி  சிரிப்பாயே
அதற்காகவேனும்
கோபத்தின் உச்சத்தில்
போடா கழுதை என
சொல்லிவிட்டு வேகமாய்
வாசல் பக்கம் ஒடிப்போவாயே
அதற்காகவேனும்
அதிகாலை
தூக்க பொழுதுகளை
காதுக்குள் மையிலிறகு
நுழைத்து எழுப்புவாயே
அதற்காகவேனும்
அத்திலிச்சி பூனைக்கு
வயிறு வலிக்கிறதென
விக்ஸ் ஆக்ஸன் 500
மாத்திரையை பாலில்
கலந்து வைத்தாயே
அதற்காகவேனும்
என்னுடைய சட்டயை
அணிந்ததுக்காய் திட்டு
வாங்கியபடியே
பொத்துக்கொண்டுவரும்
அழுகையை அடக்க முயல்வாயே
அதற்காவேனும்
எதற்காகவேனும்
கடவுளிடம் சண்டையிட்டாவது
பிறந்துவிடு அடுத்த ஜென்மத்திலும்
என் அடங்காபிடாரி தங்கச்சியாக
நன்றி: இப்பதிவு யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது
If you enjoyed this post, make sure you [...]

முழு பதிவையும் வாசிக்க »

நண்பனின் நிசப்த கவிதையின்
லயித்த நேரம் அங்கிருந்து கிளம்பிய
நிசப்த அலையொன்று
என்னையும் ஆட்கொண்டது
கால எந்திரத்தின் வழியே
நிசப்தத்தை நிறுத்த
எண்ணியபோது கடிகாரத்தின்
வழியாய் புகுந்து கொண்ட
நிசப்தம் கைபிடித்து கூட்டிச்சென்று
நிறுத்திப்போனது நிசப்தவெளியில்.
ஆழியெங்கும் நிசப்த அலைகள்
உணர்ச்சியின் வேகத்தில்
கெட்ட வார்த்தையாய்
வெளியேறிய எச்சில்
குமிழிகள் யாவும்
நிசப்த வெளியெங்கும்
சலனமற்று கரைந்த நேரத்தில்
கண்டுகொள்ளாத ஏக்கத்தில்
கத்தி விரைத்தது பத்தொன்பதாம்
நூற்றாண்டின் ஈழ குழந்தை
நன்றி : இது தடாகத்தில் பிரசூரமான என் கவிதை
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

ரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன்
வண்ண கட்டங்களை சேர்க்கும்
விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான்
மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம்
ஆரஞ்சு,சிவப்பு என சிதறிக்கிடந்த
நிறங்களில் ஒரே நிறம் கொண்ட
ஒன்பது கட்டங்களை ’ஒரே’
பக்கத்தில் சேர்ப்பதுதான் விதியாம்.
மஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன்
எத்தனிக்க மஞ்சளுக்கான
போராட்டம் நடந்தது
எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த
மஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர
இங்கிருந்த மஞ்சள் நிறம்
வேறெங்கோ சென்றிருந்தது
போராட்டம் சீக்கிரம்
நிறைவுருவதாய் தெரியவில்லை
வெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான
தோல்வியை போலவே நீலத்துக்கும் சிவப்புக்கும்
குளிகை குப்பியை விழுங்கிய பின்
சிறுவன் எடுத்தது வெள்ளை
மீண்டும் வெள்ளைக்கான வேட்டையில்
அனைத்து வெள்ளைக்கும் நடுவில்
சிக்கிகொண்டது ஒரு சிகப்பும், என் மனசும்
If you enjoyed this [...]

முழு பதிவையும் வாசிக்க »

தொலைந்து போன நண்பனொருவனை
’லிபர்டி’ நிறுத்ததில் பார்க்க நேர்ந்தது
ஏழாம் வகுப்பு ’ஆ’ பிரிவில்
கடைசியாய் சேர்ந்தவன் அவன்
என்று சொல்லிமுடிக்கையில்
கட்டிக்கொண்டான் லலிதமாக
சென்னை வந்து
இருபத்தியோரு வருடம்
ஆனதாகவும் பெயர் தெரியாத
நிறுவனமொன்றில்
காரியதரிசியாக இருப்பதாகவும்
சொல்ல தொடங்கையில்
தொடங்கி போனது
பெரு மழை ஒன்று
அவசரமாக விடை பெற்று
சென்றவனின் பின்
பக்கம் பார்த்தேன்,
அதே படிந்து வாரிய முடி,
சற்றே பெருத்த உடல் வாகு,
மாறாத அந்த ஒருக்களித்த சாய்ந்த நடை
நல்ல வேலை ஏழாம் வகுப்பின்
கிழிந்த டவுசர் போடவில்லை.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

படாரென்று மூடப்பட்ட சாளரத்தின்
வழியே பெறுக்கெடுத்து ஒடுகிறது
நதியொன்று…
எங்கெல்லாமோ முடிக்கிவிடப்பட்ட நதியின் திசை
தினமும் காலையில் கண்சிமிட்டுகிறது
எதிர் வீட்டு நாய் குட்டியாய்
பின்பு ஒரு நாள்
காலஎந்திரம் வழியே கல்லூரியின்
இரண்டாம் வருட செய்முறை தேர்வு
முடிந்து திரும்புகையில்
கண்டுபிடித்தேன் நதியை
‘நியூட்டனின் மூன்றாம் விதியில்’
அடுத்த வருடம் எழுதும்
கவிதையின் பனிரெண்டாவது
வரியின் எச்சம் இங்கு மீந்து கிடப்பதால்
நதியின் அசூயை விருப்பமானது தான் என்பேன்
இருந்தாலும் ஒரே ஆதங்கம்,
கடல் சேரும் வரை நிறைய பேரால்
கண்டுபிடிக்க முடிவதில்லை
நதியின் திசையும் அதன் நோக்கமும்
If you enjoyed this post, make sure you subscribe to my [...]

முழு பதிவையும் வாசிக்க »

.
சட்டென திறக்கும் போது
சிதறி ஓடும் பல்லியாய்
கலைந்து போனது நினைவுகள்
‘புள்ளைக்கு பசி எதாவது குடுங்க’
என அவள் யாசிக்கும் போது.
பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய்
தலை சிலுப்பிக்கொள்ளும்
கோவில் ஆடாய் சட்டை பைக்குள்
முகம் புதைக்கும் விரல்கள் “சில்லறைக்கென” .
கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க
ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ
எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும்
சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும்
நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை பெற்றவளாய்
“உங்க புள்ளைக நல்லா இருக்கணும்”என வாழ்த்திப்போனாள் இல்லாத கடவுளுக்கு படையலாய்
மண முடித்து எட்டு வருடம் தேதி கிழிக்கப்பட்ட காலண்டரில்
அப்பாவாகாத [...]

முழு பதிவையும் வாசிக்க »

நீர்
உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது
ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய்
நிலம்
உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி
சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி
காற்று
நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின்
முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து
மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று
செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள்
ஆகாயம்
நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய மேகத்தை கூட்டி பிரயத்தனம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

உறக்கம் களைந்த பின்னிரவின் முற்றுப்பெறாத வார்த்தை தரவு தளத்தில், வரிகள் கிடைக்காத விரக்தியின் கடைசியில் தொடங்கப்பட்டது உனக்கான இந்த கவிதை.
அலையென விரியும் மனதின் சுக்கான் பிடித்து இழுக்கும் வித்தை கற்றும்,வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கொண்டுவரும் பிரசாதமாய் கனவுகளுக்கான மஞ்சள் சுடிதார் அணிந்து என் அறை மேசைகளுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞானம் கற்றிருக்கிறாய்.
உனக்கென வேண்டாத நகத்தை கூட வெட்டாத எனக்காக இதுவரை “164″ முறை உணர்த்திவிட்டாய் நீ என்னை காதல் கொள்வதை. அவசரமாய் [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »