‘நட்சத்திரப் பதிவு’ பகுப்புக்கான தொகுப்பு

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள் இழப்பை நான் உணரும் போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்  …   – பாப்லோ நெருடா மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம்   வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் [...]

கடந்த வாரம் பொள்ளாச்சி சென்றிருந்தேன். சுழி மாற்று இலக்கிய களத்தின்  18-ம் அமர்வு சுழி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய அமர்விற்கான  பேச்சாளர் நளினி ஜமீலா. நளினியிடம்  தனியே உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னால் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான நளினியின் பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் பெயர் உண்மையானதா இல்லை புனைப் பெயரா ? (புன்னகைத்தவாறே என்னுடன் கலந்துரையாட உங்களைப் போன்ற இளைஞர்கள் வருவது சந்தோஷத்திற்குரியது என்றார்). இது என்னுடைய உண்மையான பெயர்தான். நான் இந்துவாக இருந்து [...]

பள்ளி முடிந்து வரும் மாலை  நேரங்களில் எனக்கான நொறுக்குத்தீனி எடுத்து வைப்பாயே அதற்காகவேனும் எனக்கான தட்டு கழுவியும் சட்டை தேய்தும் பின் நவீனத்துவ அன்பு காட்டுவாயே அதற்காகவேனும் எங்க அண்ணா பின்னிவிடற ஜடையே அழகு தான் என செல்வியிடம் சொல்லி  சிரிப்பாயே அதற்காகவேனும் கோபத்தின் உச்சத்தில் போடா கழுதை என சொல்லிவிட்டு வேகமாய் வாசல் பக்கம் ஒடிப்போவாயே அதற்காகவேனும் அதிகாலை தூக்க பொழுதுகளை காதுக்குள் மையிலிறகு நுழைத்து எழுப்புவாயே அதற்காகவேனும் அத்திலிச்சி பூனைக்கு வயிறு வலிக்கிறதென விக்ஸ் [...]

இன்று அடலேறு வலைபக்கம் யூத்புல் விகடனில் குட் பிளாக்(Good Blog) ஆக பக்க பட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளது. தேர்வு செய்தவர்களுக்கும், வருகை புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் அடலேறுவின் நன்றிகள்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

பேருந்து இறங்கி மெல்லென நீ திரும்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழம்பி போவேன் நீ என் மெய் எழுத்தா, இல்லை நான் உன் சார்பு எழுத்தா என்று , பிறகு அய்யனார் கோவில் திருவிழா அன்று சொன்னாய் நீ என் உயிர்மெய் எழுத்து என்று —————- குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம் நீ + வெட்கம் + வெகுளி = கவிதை தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம், [...]

எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள். எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும் சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின் நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில் தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் [...]

சாதரணமாகவே நீ வரும் கல்லுரி பேருந்து சற்று கர்வத்துடன் தான் தார்சாலை வலம் வரும் இன்று அந்த பேருந்துக்கு தலை கால் புரியாது எப்போதும் ஒருவித ஆணவத்துடனேயே என்னை முறைத்து பார்க்கும் உன் சுடிதார் பட்டாம்புச்சிகள் இன்று அதற்கு என்னை கண்டால் இன்னும் கொஞ்சம் கொழுப்பு ஏறி தான் போகும் இன்று நீ உடுத்த போகும் புது உடை உன் உடல் தீண்டின போதை தெளிய நாளை இரவு கூட ஆகலாம். என்னை பார்க்க தாமதாய் வருவது [...]

தொலைதூர பயணங்களில் தோள் சாய்ந்து துங்கும் மைஇருட்டு வேளைகளில் எப்போதும் படும் உன் ஈர நாவின் ஸ்பரிசம்…. காதல் சிறையில் அடைபட்டு பல வருடங்கள் கடந்து விட்டது. என்னை விட்டு நீ போன பிறகும் கூடஎன்னை நானே மீட்டுக்கொள்ள வழி தெரியாமல் இன்னும் விழி பிதுங்கி நிற்கிறேன்.. உன்னுடைய கதகதப்பு, கைக்குட்டை வாசனை தலையை வருடி விடும் மயிலறகு விரல்கள் அனைத்தும் மறக்க நினைத்து நினைத்து நீங்காத நினைவாகி போனது …. வருடங்கள் பல கடந்து இப்போதும் [...]