‘புனைவு’ பகுப்புக்கான தொகுப்பு

கேள்விகளால் ஆன விளையாட்டை தொடங்கினாள் தூரிகா விளையாட்டின் விதிகள் ஒருபோதும் சொல்லப்படவில்லை ஒவ்வொரு சொல்லாக‌ உதிர்க்க தொடங்கினாள் தீயிலிருந்து வெம்மை பிரிப்பது மெளனத்திலிருந்து இசை பிரிப்பது பற்றிய குறிப்புகள் அவை நினைவுக‌ளில் இருந்து அவ‌ளை பிரித்து காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில் தோற்றுப்போனேன். கீறல்களால் த‌ண்ட‌னை நிறையேற‌ தொட‌ங்கிய‌ காலையில் விழித்தெழுந்தேன் அவ‌ள் இப்போது உடலிலிருந்து என்னை பிரித்துக்கொண்டிருக்கிறாள்

கடவுளை இன்று “டைடல்பார்க்”கில் சந்தித்தேன் கோட் சூட் சகிதமாக கையில் பிளாக் பெரியுடன் லிப்டில் இருந்து வெளிப்பட்டார். ஆச்சர்யம் அடைந்தவனாய் உங்களிடம் பேச வேண்டும் என்றதற்கு தற்போது பிஸியாக இருப்பதாக சொல்லி செல்போன் நம்பர் வாங்கிக்கொண்டார். கழுத்தில் தொங்கிய நிறுவன அடையாள அட்டையை காட்டி பெருமை பட்டுக்கொண்டார். இங்கே எப்படி வேலைக்கு சேர்ந்தீர்கள் என்றதற்கு சிக்கலான கணக்கு கேள்விகள் 50ம் புதிர் வினாக்கள் 20ம் கடைசி அறையில் நடைபெற்ற குழு விவாதத்தில் வெற்றி பெற்றும் வேலைக்கு சேர்ந்ததாக [...]

எப்போதும் கவிதைகளை இரவிலேயே ஏன் பிடிக்கிறாய் என்றால் தூரிகா. இரவுகளில் தான் அலைந்து கொண்டிருக்கின்றன தனித்து விடப்பட்ட வார்த்தைகள் என்றேன். தூரத்தில் அகால ஓலமிட்டு கொண்டிருந்த பறவையின் சிறகில் மென் முத்தமிட்டு பறக்கவிட்டாள், அது நிராகரிப்பின் வார்த்தைகளை உதிர்த்தபடியே சென்றது முடிவற்ற நீண்ட இரவில். -0O0- வெறுமையால் நிரம்பிய வார்த்தையில் இருந்து ஒரு துளி எடுத்து வந்தேன் துளி கடலென உருப்பெற்றது, அதை மெல்லிய கரங்களில் ஏந்தி தன்னுடனே வைத்துக்கொண்டாள் தூரிகா துளி விலங்கென உருப்பெற்று அவளுடன் [...]

               வார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும் , எனக்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உயிரை மட்டும் விட்டு போன என் உயிரானவள் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது . நரம்பின்  குருதி வற்றி நான் என்ற அகங்காரம் திறந்து போன இரவில் உன்னிடம் என்றுமே சேராத இந்த கடிதங்கள் [...]

கனவுகளால் ஆனவளை  வார்த்தைகளால் ஆனவளை சந்தித்த ‌அதே பேருந்தில் இன்று சந்தித்தேன். கண்ணை மூடி கன‌வு  கொண்டிருந்தாள். என்னை பற்றி அவள் கனவு என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில்அவளையே உற்று நோக்கினேன், மெல்ல கண் திறந்தவள், இங்கே என்ன செய்கிறாய் என்றாள்? எனக்கு கனவுகளே வருவதில்லை என்றேன், இந்தா பிடி ! என மூன்று மூட்டை கனவுகளை கொடுத்தனுப்பினாள். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீடு சேர்ந்தேன், முதல் மூட்டை பிரித்து மூன்றாம் கனவை எடுத்துப்பார்த்தேன் அதில் நீங்கள் [...]

கடைசி ஆண்

Posted: ஆகஸ்ட் 18, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, புனைவு, Girl, life
குறிச்சொற்கள்:, ,

கருஞ்சிவப்பான இரவில் தீக்கிரையாக்கினாள் மதுரையை கையில் சிலம்பு தகிக்கிறது ஆண்களற்ற உலகமாய் மாற சாபமிடுகிறாள் விதை கிழிபட்டு மரிக்கின்றனர் அனைவரும் படக்கென போர்வை நீக்கியவள் விந்து வற்றிப்போன இரவில் என்னை புணர சொல்கிறாள் நானோ இப்பூமியின் கடைசி ஆண்

சத்தம்மின்றி கசிந்து  கொண்டிருந்தது இரவு, வெளியெங்கும்  பெய்ய தொடங்கியது   அயோடைட் மழை , ஏணியில்  ஏறிகொண்டிருக்கிறான்  பூமியின் கடைசி மனிதன், நாய்களற்ற தெருவில்  குரைத்துக்கொண்டிருக்கின்றன எலக்ட்ரானிக் பொம்மைகள்   , எடையற்று காற்றில் மிதந்து  கொண்டிருக்கிறேன் நான் , “நிலவிற்கு  வருக” பெயர் பலகையை         துடைத்துக்கொண்டிருக்கிறாள் யாருமற்ற அனாதை சிறுமி.

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள் இழப்பை நான் உணரும் போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்  …   – பாப்லோ நெருடா மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம்   வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் [...]

  நீண்ட ஈரமான கூதல் காற்று தேகம் நனைக்கும் பொழுதில் துரத்து ரயிலோசை காற்றில் கரைந்து போகிறது பள்ளி முடிந்து திரும்பும் மாலை நேர சிறுமிகளின் கைகளில் பட்டு தெறிக்கிறது வருடத்தின் முதல் மழைத்துளி சலசலக்கும் ஆற்று மணல் வெளியில் யாருமற்ற தனிமையில் நானிருக்கும் இந்த பொழுதில் சொல்லியிருக்கலாம் நீ நமது பிரிவின் முதல் வரியை

கருவரையில் வெளியேறி இருளின் நேர் கோட்டில் மிதக்கிறது ஆதாமின் எச்சம் எல்லா உடல் விற்பவளின் டயரி குறிப்புகளும் தாங்கி நிற்கும் எச்சத்தின் விளிம்பு நிலை. பின் மாலை பொழுதுகளில் மரணித்தவனை எழுப்பிக்கேட்டால் ஒரு வேளை தெரியலாம் பாவத்தின் அமைப்பு சாரா கொள்கையும் கடவுளின் இரண்டாம் வருகையும் If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!