தலையை சாய்த்து சாய்த்து கதை சொல்லுவாள் ஐரின் பாப்பா அவள் கதையில் வரும் எல்லா விலங்குகளும் பேசும் திறன் கொண்டவை நரி புலியிடம் சொல்லியதாம் புலியே புலியே என்னை விட்டுவிடு நான் பாவம். ஆமாம் நீ பாவம் உன்னை நாளைக்கு சாப்பிடுகிறேன் என புலியும் போய்விட்டதாம். புலி எங்கே போனது என்று ஒரு போதும் அவள் சொல்வதில்லை புலி மீண்டும் எப்போதாவது வரலாம் வராமலும் போகலாம் அப்படியே வந்தாலும் நாளை சாப்பிடுவதாய் சொன்ன நரியை மறந்தே போயிருக்கும் [...]

















