‘அனுபவம்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

சென்னையில் வேலைக்கு சேர்ந்த நாட்கள் அவை. பின்னிரவில்  சக்கையாய் பிழியப்பட்டு வேலையில் இருந்து வருவேன். நாங்கள் ஆறு பேர் அந்த அறையில் தங்கியிருந்தோம்.மிக குறைவான சம்பளம் எப்படி பிடித்து வைத்தாலும்  இருபதாம் தேதிக்கு மேல் கையில் காசு இருக்காது.அன்று இரவு கடைசியாகத்தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன். யாரிடமும் காசு இல்லை நண்பர்கள் அனைவரும் கடைசியாக இருந்த காசில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டனர். மதியமும் சாப்பிடவில்லை பசி கண்ணை கட்டியது. மிக சோகமாக இருந்தது.யாரிடமாவது காசு இருக்கிறதா என்றதற்கு அனைவரும் [...]

சென்னையில் இரண்டு நாட்களாக நல்ல மழை. மும்பையில் இருந்து வந்த மறுநாள், அமைதியாக  ஜ‌ன்னல் வழியே மழையை பார்த்துக்கொண்டுருந்தேன். மழையை மட்டும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதேயில்லை என்று தோன்றியது. மெல்ல தொடங்கி நீண்ட நேரம் பொழிவதற்கு தகுந்தாற்போல் வானமும் இருண்டிருந்தது. நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று வைத்திருந்த எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி நாவல் கண்முன்னே இன்னும் படிக்கவில்லை என்பதை நினைவு படுத்திக்கொண்டிருந்தது.படிப்பதற்கு முன்பு தேனீர் அருந்திவிட்டு ப‌டிக்க‌லாம் என வ‌ர‌ட்டீ ( பால் க‌ல‌க்காத‌ [...]

என் அன்பின் விழிநிலைகளை நீ அறிந்ததே கிடையாது கோபமுற்ற பொழுதுகளில் என் எதிரிலேயே கிழித்துப்போடுகிறாய் உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை யாருமற்ற பின்னிரவுகளில் கன்னங்களில் வழிந்து கொண்டிருக்கிறது தனித்துவிடப்பட்ட என் பெண்மை எனதன்பை பார்க்காமல் போ , உணராமலும் போ, ஆனால் உனக்காக அன்பை கடைவைத்து கடைசிவரை காத்திருந்தேன் என்று மட்டும் அறியாமல் போகாதே

பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]

இன்று காலை 48 ‘ A’ பேருந்தில் சாம்பல் நிற யட்சியை பார்த்தேன் அதன் அழகு வனப்பானதும் வெள்ளை பூவின் வாசனையை தனதண்டையிலும் வைத்திருந்தது யட்சிகளை பேருந்தில் காண்பது இதுவே முதல் முறை அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும் தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது யட்சியின் கண்கள் வழியே நீளும் கரங்களில் என்னை விடுவித்துக்கொள்ள திரும்பும் போது பார்த்தேன் யட்சி என்னை உயிருடன் தின்று கொண்டிருந்தாள் ———-oO0————- யட்சியின் குட்டியூன்டு இதயம் வெதுவெதுப்பாகவும் எனக்கு ஏற்ற இடமாகவும் [...]

கடந்த வாரம் பொள்ளாச்சி சென்றிருந்தேன். சுழி மாற்று இலக்கிய களத்தின்  18-ம் அமர்வு சுழி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய அமர்விற்கான  பேச்சாளர் நளினி ஜமீலா. நளினியிடம்  தனியே உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னால் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான நளினியின் பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் பெயர் உண்மையானதா இல்லை புனைப் பெயரா ? (புன்னகைத்தவாறே என்னுடன் கலந்துரையாட உங்களைப் போன்ற இளைஞர்கள் வருவது சந்தோஷத்திற்குரியது என்றார்). இது என்னுடைய உண்மையான பெயர்தான். நான் இந்துவாக இருந்து [...]

******************** நூலின் பெயர் : ராஜிவ் கொலை வழக்கு வெளியீடு : கிழக்கு பதிப்பகம் விலை : ரூ.100 பக்கம் : 232 நூலாசிரியர் : ரகோத்தமன் ********************** புத்தக திருவிழா ஆரம்பமான முதலே பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளான புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் ராஜிவ்  கொலை வழக்கு. ராஜிவ் காந்தி கொலை வழக்கில்  தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த  ரகோத்தமனால் எழுதப்பட்டதும் இந்த புத்தகத்தின் மீதான ஒரு கனமான பார்வையை படிய வைத்திருக்கலாம். ஒருவரின் கொலை இவ்வளவு விடயங்களை [...]

——————————–—————————————– நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் பகுப்பு : சிறுகதைகள் வெளியீடு : திரிசத்தி பதிப்பகம் விலை : ரூ.70 பக்கம் : 90 நூலாசிரியர் : நிலா ரசிகன் ————————————————————————– எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் [...]

அனைத்து நண்பர்களுக்கும், இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“  மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna [...]

இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள். பாடல்: வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்னெதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன் ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள் விளக்கம்: ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து [...]