‘இலக்கணம்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள். பாடல்: வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்னெதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன் ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள் விளக்கம்: ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து [...]

(புதுக்கவிதை) அந்த பழுப்பு மாலையின் பேருந்து பயணத்தில் தெரியாமல் கால் பட்டதுக்காய் மூன்று முறை மன்னிப்பு கேட்டவன் உடல் கொஞ்சம் ஒடிசலாகவும் படிக்காதவனாகவும் தெரிந்ததால் மனைவியின் முன் வீரம் காட்ட அனைவரும் பார்க்கையில் கடினமான வார்த்தை கொண்டு திட்டிய போது மெதுவாய் உருமாற தொடங்கி இருந்தது எனக்கான முகம் *********************** (நவீன கவிதை) வினையாலனையும் பெயரின் வாசம் முகர்ந்த இருளின் சலனத்தில் தொடங்கியது கடைசி நீட்சியின் பகல். வெம்மை தணிந்தவனின் சட்டை இழுத்து அட்சரச ஆழியின் சுக்கான் [...]

கதை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில்  இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த  புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது [...]

பேருந்து இறங்கி மெல்லென நீ திரும்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழம்பி போவேன் நீ என் மெய் எழுத்தா, இல்லை நான் உன் சார்பு எழுத்தா என்று , பிறகு அய்யனார் கோவில் திருவிழா அன்று சொன்னாய் நீ என் உயிர்மெய் எழுத்து என்று —————- குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம் நீ + வெட்கம் + வெகுளி = கவிதை தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம், [...]