‘கடவுள்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

கடவுளை இன்று “டைடல்பார்க்”கில் சந்தித்தேன் கோட் சூட் சகிதமாக கையில் பிளாக் பெரியுடன் லிப்டில் இருந்து வெளிப்பட்டார். ஆச்சர்யம் அடைந்தவனாய் உங்களிடம் பேச வேண்டும் என்றதற்கு தற்போது பிஸியாக இருப்பதாக சொல்லி செல்போன் நம்பர் வாங்கிக்கொண்டார். கழுத்தில் தொங்கிய நிறுவன அடையாள அட்டையை காட்டி பெருமை பட்டுக்கொண்டார். இங்கே எப்படி வேலைக்கு சேர்ந்தீர்கள் என்றதற்கு சிக்கலான கணக்கு கேள்விகள் 50ம் புதிர் வினாக்கள் 20ம் கடைசி அறையில் நடைபெற்ற குழு விவாதத்தில் வெற்றி பெற்றும் வேலைக்கு சேர்ந்ததாக [...]

இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள். பாடல்: வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்னெதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன் ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள் விளக்கம்: ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து [...]

. சட்டென திறக்கும் போது சிதறி ஓடும் பல்லியாய் கலைந்து போனது நினைவுகள் ‘புள்ளைக்கு பசி எதாவது குடுங்க’ என அவள் யாசிக்கும் போது. பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய் தலை சிலுப்பிக்கொள்ளும் கோவில் ஆடாய் சட்டை பைக்குள் முகம் புதைக்கும் விரல்கள் “சில்லறைக்கென” . கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும் சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும் நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை [...]