‘கவிதை’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

நகரும் தார் சாலையை இரண்டாக பிரிக்கும் வெள்ளை கோடுகளை முன்பக்கமாக இழுத்து பின்பக்கமாக தள்ளிக்கொண்டிருந்தது வாகனம். எட்டயபுரம் 2 கி.மீ என்பது கண்ணில் பட்டதுமே மனதிற்கு மிக நெருங்கிய உறவினர்கள் வாழும் ஊருக்கும் பயணப்படுவது போலவே இருந்தது. திசை காட்டுக்குறி “பாரதி பிறந்த வீடு” பெயர்பலகையை தாங்கியிருந்தது.வாகனத்தை வீதியில் செலுத்தும் போதே மிக மெல்லிய உணர்வு ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பாரதியின் வீடு. முன்பக்கமாக ஒரு சிறுவனிருந்தான். வாங்க வாங்க செருப்ப அங்கேயே கழட்டி விட்டுருங்க‌ என்றான். முன் அறையிலேயே [...]

கேள்விகளால் ஆன விளையாட்டை தொடங்கினாள் தூரிகா விளையாட்டின் விதிகள் ஒருபோதும் சொல்லப்படவில்லை ஒவ்வொரு சொல்லாக‌ உதிர்க்க தொடங்கினாள் தீயிலிருந்து வெம்மை பிரிப்பது மெளனத்திலிருந்து இசை பிரிப்பது பற்றிய குறிப்புகள் அவை நினைவுக‌ளில் இருந்து அவ‌ளை பிரித்து காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில் தோற்றுப்போனேன். கீறல்களால் த‌ண்ட‌னை நிறையேற‌ தொட‌ங்கிய‌ காலையில் விழித்தெழுந்தேன் அவ‌ள் இப்போது உடலிலிருந்து என்னை பிரித்துக்கொண்டிருக்கிறாள்

கல்லூரியில் முதல் நாள் வகுப்பில் கிரங்கடிக்கும் பார்வையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாயே அதற்கு என்ன அர்த்தம் ? –oO0– மென் இதய‌ம் கிழித்து குருதி புசித்து உள்ள‌ம் தொடும் உன் பார்வை –oO0– எப்ப‌டி த‌ய‌க்க‌மில்லாம‌ல் கைகுலுக்கி பெய‌ர் கேட்டாய் போடா! நான் தூங்கவேயில்லை –oO0– கரும்பலகை எழுத்துக்களை அழிக்கும் ஒவ்வொரு முறையும் அழித்துக்கொண்டுருந்தாய் என் தயக்கத்தை –oO0– எளிதாய் ம‌ய‌க்கி வைத்தாய் இய‌ல்பாய் ர‌சிக்க‌ வைத்தாய் என்னையே மெதுவாய் இழ‌க்க‌ வைத்தாய் –oO0– உன்னுட‌ன் பேசுகையில் எதேச்சையாக‌ [...]

அவள்

Posted: ஜனவரி 18, 2011 in அடலேறு, பெண்
குறிச்சொற்கள்:,

நூற்றாண்டின் வலியை அனுபவித்துவிட்டாள் அவள் உதிர்வ‌த‌ற்கு த‌யாராய் திர‌ண்டிருக்கிறது வருடத்தின் முதல் க‌ண்ணீர்துளி சிற‌குக‌ள‌ற்ற‌ தேவ‌தை மெல்ல‌ நுழைகிறாள் தனி அறையில் அவ‌ளின் பேரிரைச்சல் க‌ண்டு ந‌டுங்கிய‌ப‌டி வெளியேறுகிற‌து அமைதியின் க‌டைசி சொல் நீரால் சூழ்ந்த வீடு உடைவது கண்டு வீறிட்டு அழுகிறாய் நீ வெளிச்ச‌ம் க‌ண்டால் ந‌டுங்குகிற‌து உன்னுடல் இனி உன் த‌லை பிடித்திழுக்கும் கைக‌ளை கொண்டு மெல்ல‌ வெளியேற‌லாம் நீ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் If you enjoyed this post, make sure [...]

ஐரின் பாப்பா

Posted: ஜனவரி 14, 2011 in irene
குறிச்சொற்கள்:, ,

தலையை சாய்த்து சாய்த்து கதை சொல்லுவாள் ஐரின் பாப்பா அவ‌ள் க‌தையில் வ‌ரும் எல்லா வில‌ங்குக‌ளும் பேசும் திற‌ன் கொண்ட‌வை நரி புலியிடம் சொல்லியதாம் புலியே புலியே என்னை விட்டுவிடு நான் பாவ‌ம். ஆமாம் நீ பாவம் உன்னை நாளைக்கு சாப்பிடுகிறேன் என புலியும் போய்விட்டதாம். புலி எங்கே போனது என்று ஒரு போதும் அவள் சொல்வதில்லை புலி மீண்டும் எப்போதாவது வரலாம் வராமலும் போகலாம் அப்படியே வ‌ந்தாலும் நாளை சாப்பிடுவ‌தாய் சொன்ன‌ நரியை மறந்தே போயிருக்கும்  [...]

புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது. நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு [...]

கடவுளை இன்று “டைடல்பார்க்”கில் சந்தித்தேன் கோட் சூட் சகிதமாக கையில் பிளாக் பெரியுடன் லிப்டில் இருந்து வெளிப்பட்டார். ஆச்சர்யம் அடைந்தவனாய் உங்களிடம் பேச வேண்டும் என்றதற்கு தற்போது பிஸியாக இருப்பதாக சொல்லி செல்போன் நம்பர் வாங்கிக்கொண்டார். கழுத்தில் தொங்கிய நிறுவன அடையாள அட்டையை காட்டி பெருமை பட்டுக்கொண்டார். இங்கே எப்படி வேலைக்கு சேர்ந்தீர்கள் என்றதற்கு சிக்கலான கணக்கு கேள்விகள் 50ம் புதிர் வினாக்கள் 20ம் கடைசி அறையில் நடைபெற்ற குழு விவாதத்தில் வெற்றி பெற்றும் வேலைக்கு சேர்ந்ததாக [...]

எப்போதும் கவிதைகளை இரவிலேயே ஏன் பிடிக்கிறாய் என்றால் தூரிகா. இரவுகளில் தான் அலைந்து கொண்டிருக்கின்றன தனித்து விடப்பட்ட வார்த்தைகள் என்றேன். தூரத்தில் அகால ஓலமிட்டு கொண்டிருந்த பறவையின் சிறகில் மென் முத்தமிட்டு பறக்கவிட்டாள், அது நிராகரிப்பின் வார்த்தைகளை உதிர்த்தபடியே சென்றது முடிவற்ற நீண்ட இரவில். -0O0- வெறுமையால் நிரம்பிய வார்த்தையில் இருந்து ஒரு துளி எடுத்து வந்தேன் துளி கடலென உருப்பெற்றது, அதை மெல்லிய கரங்களில் ஏந்தி தன்னுடனே வைத்துக்கொண்டாள் தூரிகா துளி விலங்கென உருப்பெற்று அவளுடன் [...]

அழகான கொலு பொம்மைகளை பார்த்து கை தட்டி குதுகலிக்கிறாய் நீ உன்னை ஏன் கொலுவில் வைக்கவில்லை என்று குழம்பிப்போகின்றன பொம்மைகள் –0@0– நவராத்திரி கொலுவில் தேவதை பொம்மைகள் வைக்கிறார்களாம். பிறகு உன்னை எப்படி விட்டு வைத்தாள் ஜான‌கி ஆண்டி –0@0– ந‌வாராத்திரி என்றாலே திருவிழாவும்,சுண்டலும். சுண்டல் என்றாலே கொலுவும்,பொம்மைக‌ளும். மொம்மைக‌ள் என்றாலே நீயும், உன் ப‌ட்டாம்பூச்சி சுடிதாரும் தான் வ‌ந்து நிற்கிற‌தென் ம‌ன‌தில் –0@0– தேவ‌தைக‌ள் எல்லாம் வைத்த‌ கொலுவில் அழ‌கான பொம்மையை அப்ச‌ர‌ஸ் தேவ‌தை தொட்ட‌தால் [...]

கனவுகளால் ஆனவளை  வார்த்தைகளால் ஆனவளை சந்தித்த ‌அதே பேருந்தில் இன்று சந்தித்தேன். கண்ணை மூடி கன‌வு  கொண்டிருந்தாள். என்னை பற்றி அவள் கனவு என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில்அவளையே உற்று நோக்கினேன், மெல்ல கண் திறந்தவள், இங்கே என்ன செய்கிறாய் என்றாள்? எனக்கு கனவுகளே வருவதில்லை என்றேன், இந்தா பிடி ! என மூன்று மூட்டை கனவுகளை கொடுத்தனுப்பினாள். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீடு சேர்ந்தேன், முதல் மூட்டை பிரித்து மூன்றாம் கனவை எடுத்துப்பார்த்தேன் அதில் நீங்கள் [...]