Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘காதல்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

அனைத்து நண்பர்களுக்கும்,

இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“  மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
தேதி: 20 டிசம்பர் 2009
இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai - 2 ]
நூல் [...]

முழு பதிவையும் வாசிக்க »

இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள்.
பாடல்:
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்
ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி
பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள்
விளக்கம்:
ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து அழகிய தோரணம் கட்டி என் தலைவன் மணம் செய்வதாய் கனவு கண்டதாக  [...]

முழு பதிவையும் வாசிக்க »

உன் கடுமையான சொற்களின்
மீட்டெடுக்க முடியாத வார்த்தை
கணங்களை தாங்கவியலாத
பொழுதில் என்னிலிருந்து கொஞ்சம்
கொஞ்சமாய் உன்னை
விடுவித்துக்கொள்கிறாய்
முழுதுமாய் வெளியேறும் முன்
நிச்சயம் தரவேண்டும்
உனக்கான முத்தமும்
வெளியேறிய ப்ரதேசத்தின்
ரத்தக்கறைகளும்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா?
அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ?
அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ?
அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா ?
இரவு முழுக்க [...]

முழு பதிவையும் வாசிக்க »

நீர்
உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது
ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய்
நிலம்
உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி
சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி
காற்று
நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின்
முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து
மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று
செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள்
ஆகாயம்
நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய மேகத்தை கூட்டி பிரயத்தனம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

உறக்கம் களைந்த பின்னிரவின் முற்றுப்பெறாத வார்த்தை தரவு தளத்தில், வரிகள் கிடைக்காத விரக்தியின் கடைசியில் தொடங்கப்பட்டது உனக்கான இந்த கவிதை.
அலையென விரியும் மனதின் சுக்கான் பிடித்து இழுக்கும் வித்தை கற்றும்,வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கொண்டுவரும் பிரசாதமாய் கனவுகளுக்கான மஞ்சள் சுடிதார் அணிந்து என் அறை மேசைகளுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞானம் கற்றிருக்கிறாய்.
உனக்கென வேண்டாத நகத்தை கூட வெட்டாத எனக்காக இதுவரை “164″ முறை உணர்த்திவிட்டாய் நீ என்னை காதல் கொள்வதை. அவசரமாய் [...]

முழு பதிவையும் வாசிக்க »

எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள்.
எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு
என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி
காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும்
சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின்
நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில்
தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் கலங்கிய கண்களோடு
என் மேலிரண்டு சட்டை [...]

முழு பதிவையும் வாசிக்க »

அவள் புகைப்படம் பார்த்தே ஆக
வேண்டும் என்ற கன நேரத்தில்
பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல்
கண்டுபிடித்து , அவள் கணவனுடன்
எடுத்துக்கொண்ட புகைபடங்களை
திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின்
அணைந்து போனது மின்சாரம், அவசரமாய்
கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த
காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு
காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து
தட்டு கழுவி உண்டு முடித்த பின்
நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

நான் மகிழ்ச்சியாய் இருக்கும் ஒவ்வொரு தருணமும் உன்னயே நினைத்து கொள்கிறேன், உன்னை நினைக்கும் ஒவ்வொரு தருணமும் நான் மகிழ்ச்சியாகவே இருப்பதாய் உணர்கிறேன்.
காரணமே இல்லாமல் உன்னை கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் போல் உள்ளது அதற்காக வேணும் கொஞ்சம் என்னுடன் சண்டை போடேன்.
உலகின் மிக அழகான கவிதை புத்தகம் ஒன்று என் அறையில் உள்ளது. அதில் அனைத்து பக்கத்திலும் உன் பெயரே நிறைந்து உள்ளது.
நீ போடும் கோலத்தை போல் எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »