கேள்விகளால் ஆன விளையாட்டை தொடங்கினாள் தூரிகா விளையாட்டின் விதிகள் ஒருபோதும் சொல்லப்படவில்லை ஒவ்வொரு சொல்லாக உதிர்க்க தொடங்கினாள் தீயிலிருந்து வெம்மை பிரிப்பது மெளனத்திலிருந்து இசை பிரிப்பது பற்றிய குறிப்புகள் அவை நினைவுகளில் இருந்து அவளை பிரித்து காட்ட சொன்ன கேள்வியில் தோற்றுப்போனேன். கீறல்களால் தண்டனை நிறையேற தொடங்கிய காலையில் விழித்தெழுந்தேன் அவள் இப்போது உடலிலிருந்து என்னை பிரித்துக்கொண்டிருக்கிறாள்
‘காதல்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
தூரிகா
Posted: December 12, 2011 in அடலேறு, அனுபவம், கவிதை, காதல், நினைவு, பள்ளி, பிரிவு, புனைவு, பெண், Girlகுறிச்சொற்கள்:அன்பு, கவிதை, காதல், நினைவு, பெண், வாழ்க்கை
கல்லூரியில் முதல் நாள் வகுப்பில் கிரங்கடிக்கும் பார்வையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாயே அதற்கு என்ன அர்த்தம் ? –oO0– மென் இதயம் கிழித்து குருதி புசித்து உள்ளம் தொடும் உன் பார்வை –oO0– எப்படி தயக்கமில்லாமல் கைகுலுக்கி பெயர் கேட்டாய் போடா! நான் தூங்கவேயில்லை –oO0– கரும்பலகை எழுத்துக்களை அழிக்கும் ஒவ்வொரு முறையும் அழித்துக்கொண்டுருந்தாய் என் தயக்கத்தை –oO0– எளிதாய் மயக்கி வைத்தாய் இயல்பாய் ரசிக்க வைத்தாய் என்னையே மெதுவாய் இழக்க வைத்தாய் –oO0– உன்னுடன் பேசுகையில் எதேச்சையாக [...]
பொங்கலுக்கு ஊருக்கு வரும் போது கூடவே பயணிக்கிறது உன் பட்டு தாவணியும் ஊடுருவும் பார்வையும் சுற்றம் பார்த்து நீ தரும் திருட்டு முத்தமென -0O0- உன்னுடைய நீலமும் வெள்ளையும் கலந்த தாவணியில் உள்ள ஜரிகை பானை அது தான் உசத்தி என பெருமை பேசி திரிகிறது பொங்கல் பானைகளிடம் -0O0- சந்தையில் நீ ஒரே ஒரு பானையை எடுத்துக்கொண்டு மற்றவைகளை நிராகரித்தது அவமானத்தின் உச்சமாம். குறைபட்டுக்கொள்கிறது அழகான பானைகள் -0O0- டேய் அதென்னமோ முத்தப் பொங்கலாம் அப்படின்னா [...]
கொலுவில் வீற்றிருக்கிறாள் காதலி
Posted: அக்டோபர் 10, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பெண், முத்தம், festivalகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, உருவகம், கவிதை, காதல், நவராத்திரி, பெண்
அழகான கொலு பொம்மைகளை பார்த்து கை தட்டி குதுகலிக்கிறாய் நீ உன்னை ஏன் கொலுவில் வைக்கவில்லை என்று குழம்பிப்போகின்றன பொம்மைகள் –0@0– நவராத்திரி கொலுவில் தேவதை பொம்மைகள் வைக்கிறார்களாம். பிறகு உன்னை எப்படி விட்டு வைத்தாள் ஜானகி ஆண்டி –0@0– நவாராத்திரி என்றாலே திருவிழாவும்,சுண்டலும். சுண்டல் என்றாலே கொலுவும்,பொம்மைகளும். மொம்மைகள் என்றாலே நீயும், உன் பட்டாம்பூச்சி சுடிதாரும் தான் வந்து நிற்கிறதென் மனதில் –0@0– தேவதைகள் எல்லாம் வைத்த கொலுவில் அழகான பொம்மையை அப்சரஸ் தேவதை தொட்டதால் [...]
இல்லாத ஒருவன்
Posted: அக்டோபர் 5, 2010 in அடலேறு, சிறுகதை, நினைவு, புனைவு, பெண்குறிச்சொற்கள்:உருவகம், காதல், புனைவு, பெண்
வார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும் , எனக்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உயிரை மட்டும் விட்டு போன என் உயிரானவள் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது . நரம்பின் குருதி வற்றி நான் என்ற அகங்காரம் திறந்து போன இரவில் உன்னிடம் என்றுமே சேராத இந்த கடிதங்கள் [...]
பிரிவின் வலி
Posted: ஜூலை 1, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், நினைவு, பள்ளி, பிரிவு, பெண், வாழ்க்கை, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, கவிதை, காதல், சோகம், நினைவு, லகர தமிழச்சி, வாழ்த்து
எப்படியும் தொடங்கி விடுகிறது நீயில்லா தனிமையின் இரவுகளும் அதன் பின்னான வெறுமையின் வியர்வை துளிகளும் உன் அளவான சிரிப்பும் பேருந்து பயணங்களில் தோள் சாய்ந்து தூங்குவதும் நீ வைக்கும் தலைகீழ் ” ப “ வடிவிலான மல்லிகை பூவும் , உன் நினைவுகளும், உனக்கான காதலும் இன்னும் நிறம் மாறாமல் இருக்கின்றன. நீ விட்டு சென்ற பிரிவின் வலியை பின்னிரவுகளில் நனைந்து போன என் தலையணையை கேட்டுப்பார். உனக்கான காதலும் கவிதையும் இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது குடைக்குள் இருந்து மழையை [...]
தேவதையின் பிறந்தநாள்
Posted: ஜூன் 22, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல்குறிச்சொற்கள்:அடலேறு, கவிதை, காதல், நினைவு, புனைவு, பெண், வாழ்த்து
நீயோ ”பிறந்தநாளை” கொண்டாடிக்கொண்டிருக்கிறாய் நீ பிறந்ததற்காக அந்தநாளை மற்ற நாட்கள் கொண்டாடிக்கொண்டிருப்பது தெரியுமா உனக்கு *************** பிறந்தநாள் அன்று என்னை பார்ப்பதற்காக பூக்களை சூடிக்கொள்கிறாய் பூக்களோ உன் தலையில் ஏறி விட்ட மமதையில் உனக்கு என்னை விட பூக்கள் மீது தான் காதல் அதிகமென வம்புக்கிழுக்கின்றன என்னை *************** கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றாய். கடல் அலையை கையிலேந்தி [...]
இப்படிக்கு உன் பிரியா-அறிவியல் புனைக்கதை
Posted: ஜூன் 17, 2010 in Adaleru, அடலேறு, அறிவிப்பு, அறிவியல் புனைக்கதை, கம்ப்யூட்டர், காதல், சிறுகதை, தமிழ், நட்சத்திரப் பதிவு, பிரிவு, புனைவு, பெண், Science Fiction, Short Storyகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, உருவகம், காதல், நினைவு, புனைவு, பெண், வாழ்க்கை, life style, love, Science Fiction
அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள் இழப்பை நான் உணரும் போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் … – பாப்லோ நெருடா மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் [...]
எனதன்பின் பூவிதழ்
Posted: April 28, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, பள்ளி, புனைவு, பெண், பொது, வாழ்த்து, Girl, Imagination, life, love, scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், சோகம், தமிழ், நினைவு, புனைவு, பெண், பேச்சிலர், மொழி, life style, love, poem, sad
பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]
படித்ததில் பிடித்தது
Posted: April 25, 2010 in நிலாரசிகன்குறிச்சொற்கள்:காதல், நிலா ரசிகன், படித்ததில் பிடித்தது
நிலா ரசிகனின் பாவனைப்பெண் கவிதையை தனிமையில் அமர்ந்து நேற்று படித்தேன். கவிதை வரிகளில் என்னமோ வசியம் வைத்திருக்கிறார் இவர். படித்ததும் பிடித்துப்போன கவிதை இங்கே. அன்பின் கண்ணாடி தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை ஒரு மழைத்துளியாக்கி உன்னிடம் கொண்டுவருகிறேன். கடலடியில் நகரும் ஆழ்ந்த மெளனத்துடன் என்னை எதிர்கொள்கிறாய். அறுந்து விழுகின்ற சொற்களுடன் தடுமாறும் என் கரம் பற்றுகிறாய். உனக்கென நான் கொணர்ந்த மழைத்துளி கடலாகி நம்மைச் சூழ்கிறது. தெரிந்தே தவற விடுகிறோம் நம் மகத்தான அன்பின் கண்ணாடியை. உனக்கும் [...]

















