‘கிறுக்கல்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

என் அன்பின் விழிநிலைகளை நீ அறிந்ததே கிடையாது கோபமுற்ற பொழுதுகளில் என் எதிரிலேயே கிழித்துப்போடுகிறாய் உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை யாருமற்ற பின்னிரவுகளில் கன்னங்களில் வழிந்து கொண்டிருக்கிறது தனித்துவிடப்பட்ட என் பெண்மை எனதன்பை பார்க்காமல் போ , உணராமலும் போ, ஆனால் உனக்காக அன்பை கடைவைத்து கடைசிவரை காத்திருந்தேன் என்று மட்டும் அறியாமல் போகாதே

  நீண்ட ஈரமான கூதல் காற்று தேகம் நனைக்கும் பொழுதில் துரத்து ரயிலோசை காற்றில் கரைந்து போகிறது பள்ளி முடிந்து திரும்பும் மாலை நேர சிறுமிகளின் கைகளில் பட்டு தெறிக்கிறது வருடத்தின் முதல் மழைத்துளி சலசலக்கும் ஆற்று மணல் வெளியில் யாருமற்ற தனிமையில் நானிருக்கும் இந்த பொழுதில் சொல்லியிருக்கலாம் நீ நமது பிரிவின் முதல் வரியை

கருவரையில் வெளியேறி இருளின் நேர் கோட்டில் மிதக்கிறது ஆதாமின் எச்சம் எல்லா உடல் விற்பவளின் டயரி குறிப்புகளும் தாங்கி நிற்கும் எச்சத்தின் விளிம்பு நிலை. பின் மாலை பொழுதுகளில் மரணித்தவனை எழுப்பிக்கேட்டால் ஒரு வேளை தெரியலாம் பாவத்தின் அமைப்பு சாரா கொள்கையும் கடவுளின் இரண்டாம் வருகையும் If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]

ஞாயிறு காலையில் நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும் ஒரு முத்தம் என மூன்று முத்தம் மட்டும் தரும் கொடுமைகாரி நீ. ——-0O0———- எப்போதோ நீ எழுதிய என் பேனாவில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் உன் வாசனையை ——-0O0———- எதற்கு பார்த்தாய் என்கிறாய் சும்மாதான் என்கிறேன் என்னை சும்மா சும்மா பாத்திட்டே இருக்க மாட்டயா டா என காதல் பேசி திரியும் இந்த அழகு பிசாசை என்ன செய்வது? ——-0O0———- மோகமுற்ற பொழுதுகளில் குகுருப்பாய் ஒரு பார்வை பார்த்து மடியில் [...]

மெல்ல கீழுதடு  கடிப்பாய் கண்களை சுருக்குவாய் நகங்களினால் பற்களை தேய்பாய் தேவையற்ற சண்டையிடுவாய் என்னை விட நாய்குட்டிக்கு தான் காதல் அதிகமென வாதாடுவாய் இப்படி ஏதேனும் ஒன்றில் உட்புகுந்து அன்றைக்கான கனவின் பிம்பங்களை எடுத்துக்கொண்டு மெல்ல வீடு  சேர்வேன் நான் அன்றைய இரவின் கனவுக்காக If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

உன் கடுமையான சொற்களின் மீட்டெடுக்க முடியாத வார்த்தை கணங்களை தாங்கவியலாத பொழுதில் என்னிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை விடுவித்துக்கொள்கிறாய் முழுதுமாய் வெளியேறும் முன் நிச்சயம் தரவேண்டும் உனக்கான முத்தமும் வெளியேறிய ப்ரதேசத்தின் ரத்தக்கறைகளும். If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

ரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன் வண்ண கட்டங்களை சேர்க்கும் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான் மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம் ஆரஞ்சு,சிவப்பு என சிதறிக்கிடந்த நிறங்களில் ஒரே நிறம் கொண்ட ஒன்பது கட்டங்களை ’ஒரே’ பக்கத்தில் சேர்ப்பதுதான் விதியாம். மஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன் எத்தனிக்க மஞ்சளுக்கான போராட்டம் நடந்தது எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த மஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர இங்கிருந்த மஞ்சள் நிறம் வேறெங்கோ சென்றிருந்தது போராட்டம் சீக்கிரம் நிறைவுருவதாய் தெரியவில்லை வெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான தோல்வியை போலவே [...]

வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல.. தொலைபேசி உரையாடல் -1 நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா? எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க? நான்:அடலேறு பேசறங்க… எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா? நான்: இல்லங்க என் பேரு அடலேறு.. எதிர்முனை:என்ன அடலொரு ஆ.. (டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க) அலோவ் [...]

நீர் உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய் நிலம் உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி காற்று நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின் முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள் ஆகாயம் நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய [...]