‘சோகம்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

எப்படியும் தொடங்கி விடுகிறது நீயில்லா தனிமையின் இரவுகளும் அதன் பின்னான வெறுமையின் வியர்வை துளிகளும் உன் அளவான சிரிப்பும் பேருந்து பயணங்களில் தோள் சாய்ந்து தூங்குவதும் நீ வைக்கும் தலைகீழ் ” ப “ வடிவிலான மல்லிகை பூவும் , உன் நினைவுகளும், உனக்கான காதலும் இன்னும் நிறம் மாறாமல் இருக்கின்றன. நீ விட்டு சென்ற பிரிவின் வலியை பின்னிரவுகளில் நனைந்து போன என் தலையணையை கேட்டுப்பார். உனக்கான காதலும் கவிதையும் இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது குடைக்குள் இருந்து மழையை [...]

 தூக்கம் தொலைத்த இரவில்  எப்போதும் சாலையில் உறங்கும் ஒருவனை கண்டேன் பல்வேறு கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக்கொண்டிருந்தான் கவிதைகளை எப்படி பிடிக்கிறாய் என்றதற்கு இரவுகளில் கவிதை பிடிப்பது எளிது என்றான் இரவு என்பதே  அவளின் நினைவு சிகரெட் தனிமை அவளின் நினைவு தவிப்பு கோபம் அவளின் நினைவு கவிதை கண்ணீர் அவளின் நினைவு தயக்கம் வெறுமை அவளின் நினைவுகளுடே      கலந்திருந்தவனுக்கு போத்தல் சாராயத்தை  ஊற்றிக்கொடுத்த பின்     முனகதொடங்கினான் கடவுள் காதல் கலவி [...]

என் அன்பின் விழிநிலைகளை நீ அறிந்ததே கிடையாது கோபமுற்ற பொழுதுகளில் என் எதிரிலேயே கிழித்துப்போடுகிறாய் உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை யாருமற்ற பின்னிரவுகளில் கன்னங்களில் வழிந்து கொண்டிருக்கிறது தனித்துவிடப்பட்ட என் பெண்மை எனதன்பை பார்க்காமல் போ , உணராமலும் போ, ஆனால் உனக்காக அன்பை கடைவைத்து கடைசிவரை காத்திருந்தேன் என்று மட்டும் அறியாமல் போகாதே

பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]

இன்று காலை 48 ‘ A’ பேருந்தில் சாம்பல் நிற யட்சியை பார்த்தேன் அதன் அழகு வனப்பானதும் வெள்ளை பூவின் வாசனையை தனதண்டையிலும் வைத்திருந்தது யட்சிகளை பேருந்தில் காண்பது இதுவே முதல் முறை அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும் தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது யட்சியின் கண்கள் வழியே நீளும் கரங்களில் என்னை விடுவித்துக்கொள்ள திரும்பும் போது பார்த்தேன் யட்சி என்னை உயிருடன் தின்று கொண்டிருந்தாள் ———-oO0————- யட்சியின் குட்டியூன்டு இதயம் வெதுவெதுப்பாகவும் எனக்கு ஏற்ற இடமாகவும் [...]

******************** நூலின் பெயர் : ராஜிவ் கொலை வழக்கு வெளியீடு : கிழக்கு பதிப்பகம் விலை : ரூ.100 பக்கம் : 232 நூலாசிரியர் : ரகோத்தமன் ********************** புத்தக திருவிழா ஆரம்பமான முதலே பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளான புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் ராஜிவ்  கொலை வழக்கு. ராஜிவ் காந்தி கொலை வழக்கில்  தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த  ரகோத்தமனால் எழுதப்பட்டதும் இந்த புத்தகத்தின் மீதான ஒரு கனமான பார்வையை படிய வைத்திருக்கலாம். ஒருவரின் கொலை இவ்வளவு விடயங்களை [...]

இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள். பாடல்: வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்னெதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன் ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள் விளக்கம்: ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து [...]

உன் கடுமையான சொற்களின் மீட்டெடுக்க முடியாத வார்த்தை கணங்களை தாங்கவியலாத பொழுதில் என்னிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை விடுவித்துக்கொள்கிறாய் முழுதுமாய் வெளியேறும் முன் நிச்சயம் தரவேண்டும் உனக்கான முத்தமும் வெளியேறிய ப்ரதேசத்தின் ரத்தக்கறைகளும். If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

(புதுக்கவிதை) அந்த பழுப்பு மாலையின் பேருந்து பயணத்தில் தெரியாமல் கால் பட்டதுக்காய் மூன்று முறை மன்னிப்பு கேட்டவன் உடல் கொஞ்சம் ஒடிசலாகவும் படிக்காதவனாகவும் தெரிந்ததால் மனைவியின் முன் வீரம் காட்ட அனைவரும் பார்க்கையில் கடினமான வார்த்தை கொண்டு திட்டிய போது மெதுவாய் உருமாற தொடங்கி இருந்தது எனக்கான முகம் *********************** (நவீன கவிதை) வினையாலனையும் பெயரின் வாசம் முகர்ந்த இருளின் சலனத்தில் தொடங்கியது கடைசி நீட்சியின் பகல். வெம்மை தணிந்தவனின் சட்டை இழுத்து அட்சரச ஆழியின் சுக்கான் [...]

நண்பனின் நிசப்த கவிதையின் லயித்த நேரம் அங்கிருந்து கிளம்பிய நிசப்த அலையொன்று என்னையும் ஆட்கொண்டது கால எந்திரத்தின் வழியே நிசப்தத்தை நிறுத்த எண்ணியபோது கடிகாரத்தின் வழியாய் புகுந்து கொண்ட நிசப்தம் கைபிடித்து கூட்டிச்சென்று நிறுத்திப்போனது நிசப்தவெளியில். ஆழியெங்கும் நிசப்த அலைகள் உணர்ச்சியின் வேகத்தில் கெட்ட வார்த்தையாய் வெளியேறிய எச்சில் குமிழிகள் யாவும் நிசப்த வெளியெங்கும் சலனமற்று கரைந்த நேரத்தில் கண்டுகொள்ளாத ஏக்கத்தில் கத்தி விரைத்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழ குழந்தை நன்றி : இது தடாகத்தில் பிரசூரமான [...]