‘நினைவு’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

கேள்விகளால் ஆன விளையாட்டை தொடங்கினாள் தூரிகா விளையாட்டின் விதிகள் ஒருபோதும் சொல்லப்படவில்லை ஒவ்வொரு சொல்லாக‌ உதிர்க்க தொடங்கினாள் தீயிலிருந்து வெம்மை பிரிப்பது மெளனத்திலிருந்து இசை பிரிப்பது பற்றிய குறிப்புகள் அவை நினைவுக‌ளில் இருந்து அவ‌ளை பிரித்து காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில் தோற்றுப்போனேன். கீறல்களால் த‌ண்ட‌னை நிறையேற‌ தொட‌ங்கிய‌ காலையில் விழித்தெழுந்தேன் அவ‌ள் இப்போது உடலிலிருந்து என்னை பிரித்துக்கொண்டிருக்கிறாள்

கல்லூரியில் முதல் நாள் வகுப்பில் கிரங்கடிக்கும் பார்வையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாயே அதற்கு என்ன அர்த்தம் ? –oO0– மென் இதய‌ம் கிழித்து குருதி புசித்து உள்ள‌ம் தொடும் உன் பார்வை –oO0– எப்ப‌டி த‌ய‌க்க‌மில்லாம‌ல் கைகுலுக்கி பெய‌ர் கேட்டாய் போடா! நான் தூங்கவேயில்லை –oO0– கரும்பலகை எழுத்துக்களை அழிக்கும் ஒவ்வொரு முறையும் அழித்துக்கொண்டுருந்தாய் என் தயக்கத்தை –oO0– எளிதாய் ம‌ய‌க்கி வைத்தாய் இய‌ல்பாய் ர‌சிக்க‌ வைத்தாய் என்னையே மெதுவாய் இழ‌க்க‌ வைத்தாய் –oO0– உன்னுட‌ன் பேசுகையில் எதேச்சையாக‌ [...]

  பால்ய வயது நியாபங்கள் எப்போதுமே மனதை லயிப்பிற்குள்ளாக்குபவை. நகரத்தின் இத்தனை சுகங்களை அனுபவித்து விட்டாலும் கிராமம் இன்னும்  ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வீதம்பட்டி. அங்கே நடக்கும் கோயில் திருவிழா பிரசித்தமானது. திருவிழாவின் போது நடத்தும் தெருக்கூத்து, நாட்டியம் இவைகளுக்காகவே திருவிழா சென்ற நாட்கள் அவை. இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய நடக்கும், புழுதி படிந்த கால்களுடன் அவர்கள் ஆடிய நடனமும், வண்ண விளக்குகளால் நிறைந்த [...]

பொங்கலுக்கு ஊருக்கு வரும் போது கூடவே பயணிக்கிறது உன் பட்டு தாவணியும் ஊடுருவும் பார்வையும் சுற்றம் பார்த்து நீ தரும் திருட்டு முத்தமென‌ -0O0- உன்னுடைய‌ நீலமும் வெள்ளையும் கலந்த தாவ‌ணியில் உள்ள ஜரிகை பானை அது தான் உச‌த்தி என‌ பெருமை பேசி திரிகிற‌து பொங்கல் பானைக‌ளிட‌ம் -0O0- சந்தையில் நீ ஒரே ஒரு பானையை எடுத்துக்கொண்டு மற்றவைகளை நிராகரித்தது அவமானத்தின் உச்சமாம். குறைப‌ட்டுக்கொள்கிற‌து அழகான பானைகள் -0O0- டேய் அதென்ன‌மோ முத்தப் பொங்க‌லாம் அப்ப‌டின்னா [...]

சென்னையில் வேலைக்கு சேர்ந்த நாட்கள் அவை. பின்னிரவில்  சக்கையாய் பிழியப்பட்டு வேலையில் இருந்து வருவேன். நாங்கள் ஆறு பேர் அந்த அறையில் தங்கியிருந்தோம்.மிக குறைவான சம்பளம் எப்படி பிடித்து வைத்தாலும்  இருபதாம் தேதிக்கு மேல் கையில் காசு இருக்காது.அன்று இரவு கடைசியாகத்தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன். யாரிடமும் காசு இல்லை நண்பர்கள் அனைவரும் கடைசியாக இருந்த காசில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டனர். மதியமும் சாப்பிடவில்லை பசி கண்ணை கட்டியது. மிக சோகமாக இருந்தது.யாரிடமாவது காசு இருக்கிறதா என்றதற்கு அனைவரும் [...]

எப்போதும் கவிதைகளை இரவிலேயே ஏன் பிடிக்கிறாய் என்றால் தூரிகா. இரவுகளில் தான் அலைந்து கொண்டிருக்கின்றன தனித்து விடப்பட்ட வார்த்தைகள் என்றேன். தூரத்தில் அகால ஓலமிட்டு கொண்டிருந்த பறவையின் சிறகில் மென் முத்தமிட்டு பறக்கவிட்டாள், அது நிராகரிப்பின் வார்த்தைகளை உதிர்த்தபடியே சென்றது முடிவற்ற நீண்ட இரவில். -0O0- வெறுமையால் நிரம்பிய வார்த்தையில் இருந்து ஒரு துளி எடுத்து வந்தேன் துளி கடலென உருப்பெற்றது, அதை மெல்லிய கரங்களில் ஏந்தி தன்னுடனே வைத்துக்கொண்டாள் தூரிகா துளி விலங்கென உருப்பெற்று அவளுடன் [...]

எப்படியும் தொடங்கி விடுகிறது நீயில்லா தனிமையின் இரவுகளும் அதன் பின்னான வெறுமையின் வியர்வை துளிகளும் உன் அளவான சிரிப்பும் பேருந்து பயணங்களில் தோள் சாய்ந்து தூங்குவதும் நீ வைக்கும் தலைகீழ் ” ப “ வடிவிலான மல்லிகை பூவும் , உன் நினைவுகளும், உனக்கான காதலும் இன்னும் நிறம் மாறாமல் இருக்கின்றன. நீ விட்டு சென்ற பிரிவின் வலியை பின்னிரவுகளில் நனைந்து போன என் தலையணையை கேட்டுப்பார். உனக்கான காதலும் கவிதையும் இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது குடைக்குள் இருந்து மழையை [...]

    நீயோ ”பிறந்தநாளை” கொண்டாடிக்கொண்டிருக்கிறாய் நீ பிறந்ததற்காக அந்தநாளை  மற்ற நாட்கள் கொண்டாடிக்கொண்டிருப்பது தெரியுமா உனக்கு *************** பிறந்தநாள் அன்று என்னை பார்ப்பதற்காக பூக்களை  சூடிக்கொள்கிறாய் பூக்களோ உன் தலையில் ஏறி விட்ட மமதையில் உனக்கு என்னை விட பூக்கள் மீது தான் காதல் அதிகமென  வம்புக்கிழுக்கின்றன என்னை  *************** கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றாய். கடல் அலையை கையிலேந்தி                      [...]

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள் இழப்பை நான் உணரும் போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்  …   – பாப்லோ நெருடா மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம்   வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் [...]

 தூக்கம் தொலைத்த இரவில்  எப்போதும் சாலையில் உறங்கும் ஒருவனை கண்டேன் பல்வேறு கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக்கொண்டிருந்தான் கவிதைகளை எப்படி பிடிக்கிறாய் என்றதற்கு இரவுகளில் கவிதை பிடிப்பது எளிது என்றான் இரவு என்பதே  அவளின் நினைவு சிகரெட் தனிமை அவளின் நினைவு தவிப்பு கோபம் அவளின் நினைவு கவிதை கண்ணீர் அவளின் நினைவு தயக்கம் வெறுமை அவளின் நினைவுகளுடே      கலந்திருந்தவனுக்கு போத்தல் சாராயத்தை  ஊற்றிக்கொடுத்த பின்     முனகதொடங்கினான் கடவுள் காதல் கலவி [...]