‘பிறந்தநாள்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

பிறந்த நாள்

Posted: ஆகஸ்ட் 13, 2010 in Adaleru, அடலேறு, பதிவர்
குறிச்சொற்கள்:, ,

இன்று எனது பிறந்த நாள். பள்ளிக்கூட நாட்களில் பல  பிறந்தநாட்களை வீட்டில் இருந்து கொண்டாடி உள்ளேன். காலை எழுந்ததும் அம்மாவின் முத்தமும் அவள் செய்யும் வடையும் பாயாசத்திற்குமாகவே பிறந்தநாட்கள் அடிக்கடி வராதா என் காத்திருந்த நாட்கள் நிறைய உண்டு.எஙகள் பள்ளியில் பிறந்தநாளன்று யூனிபார்ம்களுக்கு விடை கொடுத்துவிட்டு புத்தாடைகள் அணிந்துகொள்ளலாம். பிறந்த நாட்களில் கூட வறுமை காரணமாக புத்தாடை அணியாமல் வந்த பால்ய நண்பர்களை விளிம்பு நிலையில் இருந்து நினைத்துப்பார்க்கிறேன்.பிறந்த நாள் வருவதற்கு  ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்களை [...]

முன்கதைச்சுருக்கம்: அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் – இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம். குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும், அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன. [...]

இன்றைய வானிலை நிலவரம் பார்த்தாயா “இன்று தென்றல் வீசுமாம்… இன்றைய நாளை பார்த்து மற்ற 364 நாட்களுக்கும் பொறாமை… பூக்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன இன்று எப்படியாவது உன் கூந்தலில் சூடி விடப்பட வேண்டும் என்று … உன் வீட்டு கண்ணாடி இன்று தன்னை அழகு படுத்தி கொள்கிறது அழகியான நீ இன்று பேரழகியாய் அதன் முன்பு நிற்க்கையில் உடைந்து விடாமல் இருக்க .. இன்று நீ உடுத்தப்போகும் உடை பெட்டியில் உள்ள மற்ற உடைகளை பார்த்து [...]