‘பெண்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

வெயிலானவள் நீ

Posted: April 20, 2012 in அடலேறு, கவிதை
குறிச்சொற்கள்:,

வெயில் நாட்களில் துப்பட்டாவை பின் கழுத்தில் சுற்றி தலை மூடியிருப்பாயே அதில் வடிந்து போனவன் நான் ****** வெயிலால் உருகிப்போன சாக்லேட்டை நுனி மூக்கு படர நீ சாப்பிடுவதை ரசிக்கவேணும் நீளட்டும் இந்த கோடை **** கோடையின் இந்த‌ நடுநிசி விழிப்புகள் அனைத்தும் உன்னை நினைத்துக்கொள்ளத்தான் ****** வெட்கம் விலகிய இரவில் போர்வை விலக்கி அணைத்துக்கொள் நீளட்டும் இந்த அடர் ஜாமம் ****** நீண்ட கோடை விடுமுறை முடிந்த‌ சந்திப்பில் எல்லாரும் இருக்க‌ ஓடிவந்து பின்கழுத்தனைத்து முத்தமிட்டாயே [...]

கேள்விகளால் ஆன விளையாட்டை தொடங்கினாள் தூரிகா விளையாட்டின் விதிகள் ஒருபோதும் சொல்லப்படவில்லை ஒவ்வொரு சொல்லாக‌ உதிர்க்க தொடங்கினாள் தீயிலிருந்து வெம்மை பிரிப்பது மெளனத்திலிருந்து இசை பிரிப்பது பற்றிய குறிப்புகள் அவை நினைவுக‌ளில் இருந்து அவ‌ளை பிரித்து காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில் தோற்றுப்போனேன். கீறல்களால் த‌ண்ட‌னை நிறையேற‌ தொட‌ங்கிய‌ காலையில் விழித்தெழுந்தேன் அவ‌ள் இப்போது உடலிலிருந்து என்னை பிரித்துக்கொண்டிருக்கிறாள்

அவள்

Posted: ஜனவரி 18, 2011 in அடலேறு, பெண்
குறிச்சொற்கள்:,

நூற்றாண்டின் வலியை அனுபவித்துவிட்டாள் அவள் உதிர்வ‌த‌ற்கு த‌யாராய் திர‌ண்டிருக்கிறது வருடத்தின் முதல் க‌ண்ணீர்துளி சிற‌குக‌ள‌ற்ற‌ தேவ‌தை மெல்ல‌ நுழைகிறாள் தனி அறையில் அவ‌ளின் பேரிரைச்சல் க‌ண்டு ந‌டுங்கிய‌ப‌டி வெளியேறுகிற‌து அமைதியின் க‌டைசி சொல் நீரால் சூழ்ந்த வீடு உடைவது கண்டு வீறிட்டு அழுகிறாய் நீ வெளிச்ச‌ம் க‌ண்டால் ந‌டுங்குகிற‌து உன்னுடல் இனி உன் த‌லை பிடித்திழுக்கும் கைக‌ளை கொண்டு மெல்ல‌ வெளியேற‌லாம் நீ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் If you enjoyed this post, make sure [...]

அழகான கொலு பொம்மைகளை பார்த்து கை தட்டி குதுகலிக்கிறாய் நீ உன்னை ஏன் கொலுவில் வைக்கவில்லை என்று குழம்பிப்போகின்றன பொம்மைகள் –0@0– நவராத்திரி கொலுவில் தேவதை பொம்மைகள் வைக்கிறார்களாம். பிறகு உன்னை எப்படி விட்டு வைத்தாள் ஜான‌கி ஆண்டி –0@0– ந‌வாராத்திரி என்றாலே திருவிழாவும்,சுண்டலும். சுண்டல் என்றாலே கொலுவும்,பொம்மைக‌ளும். மொம்மைக‌ள் என்றாலே நீயும், உன் ப‌ட்டாம்பூச்சி சுடிதாரும் தான் வ‌ந்து நிற்கிற‌தென் ம‌ன‌தில் –0@0– தேவ‌தைக‌ள் எல்லாம் வைத்த‌ கொலுவில் அழ‌கான பொம்மையை அப்ச‌ர‌ஸ் தேவ‌தை தொட்ட‌தால் [...]

               வார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும் , எனக்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உயிரை மட்டும் விட்டு போன என் உயிரானவள் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது . நரம்பின்  குருதி வற்றி நான் என்ற அகங்காரம் திறந்து போன இரவில் உன்னிடம் என்றுமே சேராத இந்த கடிதங்கள் [...]

கனவுகளால் ஆனவளை  வார்த்தைகளால் ஆனவளை சந்தித்த ‌அதே பேருந்தில் இன்று சந்தித்தேன். கண்ணை மூடி கன‌வு  கொண்டிருந்தாள். என்னை பற்றி அவள் கனவு என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில்அவளையே உற்று நோக்கினேன், மெல்ல கண் திறந்தவள், இங்கே என்ன செய்கிறாய் என்றாள்? எனக்கு கனவுகளே வருவதில்லை என்றேன், இந்தா பிடி ! என மூன்று மூட்டை கனவுகளை கொடுத்தனுப்பினாள். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீடு சேர்ந்தேன், முதல் மூட்டை பிரித்து மூன்றாம் கனவை எடுத்துப்பார்த்தேன் அதில் நீங்கள் [...]

    நீயோ ”பிறந்தநாளை” கொண்டாடிக்கொண்டிருக்கிறாய் நீ பிறந்ததற்காக அந்தநாளை  மற்ற நாட்கள் கொண்டாடிக்கொண்டிருப்பது தெரியுமா உனக்கு *************** பிறந்தநாள் அன்று என்னை பார்ப்பதற்காக பூக்களை  சூடிக்கொள்கிறாய் பூக்களோ உன் தலையில் ஏறி விட்ட மமதையில் உனக்கு என்னை விட பூக்கள் மீது தான் காதல் அதிகமென  வம்புக்கிழுக்கின்றன என்னை  *************** கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றாய். கடல் அலையை கையிலேந்தி                      [...]

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள் இழப்பை நான் உணரும் போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்  …   – பாப்லோ நெருடா மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம்   வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் [...]

 தூக்கம் தொலைத்த இரவில்  எப்போதும் சாலையில் உறங்கும் ஒருவனை கண்டேன் பல்வேறு கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக்கொண்டிருந்தான் கவிதைகளை எப்படி பிடிக்கிறாய் என்றதற்கு இரவுகளில் கவிதை பிடிப்பது எளிது என்றான் இரவு என்பதே  அவளின் நினைவு சிகரெட் தனிமை அவளின் நினைவு தவிப்பு கோபம் அவளின் நினைவு கவிதை கண்ணீர் அவளின் நினைவு தயக்கம் வெறுமை அவளின் நினைவுகளுடே      கலந்திருந்தவனுக்கு போத்தல் சாராயத்தை  ஊற்றிக்கொடுத்த பின்     முனகதொடங்கினான் கடவுள் காதல் கலவி [...]

என் அன்பின் விழிநிலைகளை நீ அறிந்ததே கிடையாது கோபமுற்ற பொழுதுகளில் என் எதிரிலேயே கிழித்துப்போடுகிறாய் உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை யாருமற்ற பின்னிரவுகளில் கன்னங்களில் வழிந்து கொண்டிருக்கிறது தனித்துவிடப்பட்ட என் பெண்மை எனதன்பை பார்க்காமல் போ , உணராமலும் போ, ஆனால் உனக்காக அன்பை கடைவைத்து கடைசிவரை காத்திருந்தேன் என்று மட்டும் அறியாமல் போகாதே