‘பேச்சிலர்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]

ஞாயிறு காலையில் நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும் ஒரு முத்தம் என மூன்று முத்தம் மட்டும் தரும் கொடுமைகாரி நீ. ——-0O0———- எப்போதோ நீ எழுதிய என் பேனாவில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் உன் வாசனையை ——-0O0———- எதற்கு பார்த்தாய் என்கிறாய் சும்மாதான் என்கிறேன் என்னை சும்மா சும்மா பாத்திட்டே இருக்க மாட்டயா டா என காதல் பேசி திரியும் இந்த அழகு பிசாசை என்ன செய்வது? ——-0O0———- மோகமுற்ற பொழுதுகளில் குகுருப்பாய் ஒரு பார்வை பார்த்து மடியில் [...]

இன்று காலை 48 ‘ A’ பேருந்தில் சாம்பல் நிற யட்சியை பார்த்தேன் அதன் அழகு வனப்பானதும் வெள்ளை பூவின் வாசனையை தனதண்டையிலும் வைத்திருந்தது யட்சிகளை பேருந்தில் காண்பது இதுவே முதல் முறை அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும் தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது யட்சியின் கண்கள் வழியே நீளும் கரங்களில் என்னை விடுவித்துக்கொள்ள திரும்பும் போது பார்த்தேன் யட்சி என்னை உயிருடன் தின்று கொண்டிருந்தாள் ———-oO0————- யட்சியின் குட்டியூன்டு இதயம் வெதுவெதுப்பாகவும் எனக்கு ஏற்ற இடமாகவும் [...]

கதை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில்  இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த  புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது [...]

படாரென்று மூடப்பட்ட சாளரத்தின் வழியே பெருக்கெடுத்து ஓடுகிறது நதியொன்று… எங்கெல்லாமோ முடுக்கிவிடப்பட்ட நதியின் திசை தினமும் காலையில் கண்சிமிட்டுகிறது எதிர் வீட்டு நாய் குட்டியாய் பின்பு ஒரு நாள் காலஎந்திரம் வழியே கல்லூரியின் இரண்டாம் வருட செய்முறை தேர்வு முடிந்து திரும்புகையில் கண்டுபிடித்தேன் நதியை ‘நியூட்டனின் மூன்றாம் விதியில்’ அடுத்த வருடம் எழுதும் கவிதையின் பன்னிரெண்டாவது வரியின் எச்சம் இங்கு மீந்து கிடப்பதால் நதியின் அசூயை விருப்பமானது தான் என்பேன் இருந்தாலும் ஒரே ஆதங்கம், கடல் சேரும் [...]

முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா? அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ? அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ? அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா [...]

காலை தொடங்கி E.C.R கடற்கரை சுற்றி மடி மீதமர்ந்து ஐஸ் குச்சி பரிமாறி அருகில் இருந்து I Love You SMS அனுப்பி நேற்றே பதிவு செய்த திரைப்படம் பார்த்து ஒரு கையில் சிகரெட்டுடன் உன் கை பற்றி யாருமற்ற மாலை நேர கடற்கரை நடை பழகி வினையூக்கி சொன்னது போல டிப்ளோமெடிக்காய் புவியீர்ப்பை மீறிய முத்தம் கொடுத்து இறுக கட்டி பிடித்த நீண்ட தூர இரு சக்கர வாகன பயணம் முடித்து விடுதி வாசலில் இறக்கி [...]

அவள் புகைப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்ற கன நேரத்தில் பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல் கண்டுபிடித்து , அவள் கணவனுடன் எடுத்துக்கொண்ட புகைபடங்களை திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின் அணைந்து போனது மின்சாரம், அவசரமாய் கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து தட்டு கழுவி உண்டு முடித்த பின் நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது. If you [...]

பேச்சிலர் இந்த வார்த்தைய உச்சரிக்கும் போதே முன்னால் பேச்சிலர்களுக்கு இந்நாள் பேச்சிலர் பத்தி ஒரு பெரிய பிம்பம் விழுகும் அது என்னன்னா ( தம் , தண்ணி , தேவை இல்லமா ஊர் சுத்தறது) இப்படி அடுக்கீட்டே போவாங்க ஆனா பேச்சிலர் உண்மை நிலை என்ன? தனக்கும் , தன்ன சுத்தி இருக்கவங்களுக்கும் தன்னால முடிஞ்ச எதாவது செய்யனும்னு தான் எல்லா பேச்சுலர்ஸ்மே ( சென்னை,மதுரை,பெங்களூர்,மும்பை, டெல்லின்னு ) வீட்ல கட்டி குடுத்த கூட்டாசோரோட ரயில் ஏறாங்க, [...]