Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘மொக்கை’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல..
தொலைபேசி உரையாடல் -1
நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா?
எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க?
நான்:அடலேறு பேசறங்க…
எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா?
நான்: இல்லங்க என் பேரு அடலேறு..
எதிர்முனை:என்ன அடலொரு ஆ..
(டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க)
அலோவ் அடலொரு சொல்லுங்க , எந்த ஏரியா நீங்க?
நான்:நான் கோடம்பாக்கம் ..,வீட்ல [...]

முழு பதிவையும் வாசிக்க »

இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்

அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்
எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்
நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்
ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்
செம்பட்டயன் என்றே அழைப்பார்
பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று
விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி
இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு [...]

முழு பதிவையும் வாசிக்க »

அவள் புகைப்படம் பார்த்தே ஆக
வேண்டும் என்ற கன நேரத்தில்
பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல்
கண்டுபிடித்து , அவள் கணவனுடன்
எடுத்துக்கொண்ட புகைபடங்களை
திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின்
அணைந்து போனது மின்சாரம், அவசரமாய்
கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த
காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு
காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து
தட்டு கழுவி உண்டு முடித்த பின்
நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

உன்னை நினைத்து உருகியது இல்லை,
உனக்காக கவிதை புனைந்ததும் இல்லை,
உன்னுடைய நினைவுகள் என்னுடைய தூக்கத்தை மறக்கடித்ததும் இல்லை !!
அழகு சிலையாம் நீ ! ஆனால் உன்னுடைய அழகு என்னை சலனப்படுத்தியது கிடையாது,
எல்லாரையும் திமிராக பார்க்குமாம் உன் சுடிதார் பட்டாம் பூச்சிகள் ! !
எனக்கு அந்த பட்டாம் பூச்சிகள் நிறம் கூட நியாபகத்தில் இல்லை,
படுக்கையில் உன்னை நினைத்து தூக்கம் வராமல் புரண்டது கிடையாது,
கனவுகளில் உன்னை தொலைத்து தேடியதும் கிடையாது,
இப்படி எந்த காரணம் இல்லாமல் வருவதற்கு பெயர் தான் [...]

முழு பதிவையும் வாசிக்க »