பள்ளி முடிந்து வரும்
மாலை நேரங்களில் எனக்கான
நொறுக்குத்தீனி
எடுத்து வைப்பாயே
அதற்காகவேனும்
எனக்கான தட்டு கழுவியும்
சட்டை தேய்தும் பின்
நவீனத்துவ அன்பு
காட்டுவாயே
அதற்காகவேனும்
எங்க அண்ணா பின்னிவிடற
ஜடையே அழகு தான்
என செல்வியிடம்
சொல்லி சிரிப்பாயே
அதற்காகவேனும்
கோபத்தின் உச்சத்தில்
போடா கழுதை என
சொல்லிவிட்டு வேகமாய்
வாசல் பக்கம் ஒடிப்போவாயே
அதற்காகவேனும்
அதிகாலை
தூக்க பொழுதுகளை
காதுக்குள் மையிலிறகு
நுழைத்து எழுப்புவாயே
அதற்காகவேனும்
அத்திலிச்சி பூனைக்கு
வயிறு வலிக்கிறதென
விக்ஸ் ஆக்ஸன் 500
மாத்திரையை பாலில்
கலந்து வைத்தாயே
அதற்காகவேனும்
என்னுடைய சட்டயை
அணிந்ததுக்காய் திட்டு
வாங்கியபடியே
பொத்துக்கொண்டுவரும்
அழுகையை அடக்க முயல்வாயே
அதற்காவேனும்
எதற்காகவேனும்
கடவுளிடம் சண்டையிட்டாவது
பிறந்துவிடு அடுத்த ஜென்மத்திலும்
என் அடங்காபிடாரி தங்கச்சியாக
நன்றி: இப்பதிவு யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது
If you enjoyed this post, make sure you [...]
‘வாழ்க்கை’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
அடங்காபிடாரி
Posted in Adaleru, Sister, அடலேறு, அனுபவம், கவிதை, நட்சத்திரப் பதிவு, நட்பு, நினைவு, பள்ளி, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது அண்ணா, அனுபவம், அன்பு, தங்கச்சி, தமிழ், வாழ்க்கை, வாழ்த்து, life style, thanks on நவம்பர் 6, 2009 | 41 மறுமொழிகள் »
கடைசி பக்க கிறுக்கல்கள் -7
Posted in Adaleru, scribblings, அடலேறு, அனுபவம், கவிதை, தமிழ், நினைவு, பள்ளி, ரயில் பயணம், குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, கவிதை, கிறுக்கல், சிறுவன், தமிழ், பயணம், மொழி, வாழ்க்கை, poem on அக்டோபர் 26, 2009 | 10 மறுமொழிகள் »
ரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன்
வண்ண கட்டங்களை சேர்க்கும்
விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான்
மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம்
ஆரஞ்சு,சிவப்பு என சிதறிக்கிடந்த
நிறங்களில் ஒரே நிறம் கொண்ட
ஒன்பது கட்டங்களை ’ஒரே’
பக்கத்தில் சேர்ப்பதுதான் விதியாம்.
மஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன்
எத்தனிக்க மஞ்சளுக்கான
போராட்டம் நடந்தது
எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த
மஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர
இங்கிருந்த மஞ்சள் நிறம்
வேறெங்கோ சென்றிருந்தது
போராட்டம் சீக்கிரம்
நிறைவுருவதாய் தெரியவில்லை
வெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான
தோல்வியை போலவே நீலத்துக்கும் சிவப்புக்கும்
குளிகை குப்பியை விழுங்கிய பின்
சிறுவன் எடுத்தது வெள்ளை
மீண்டும் வெள்ளைக்கான வேட்டையில்
அனைத்து வெள்ளைக்கும் நடுவில்
சிக்கிகொண்டது ஒரு சிகப்பும், என் மனசும்
If you enjoyed this [...]
சொந்த அனுபவமும் நொந்த அனுபவமும்
Posted in Adaleru, அடலேறு, அனுபவம், தமிழ், நினைவு, மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அனுபவம், உருவகம், கிறுக்கல், நொந்த அனுபவமும், மொக்கை, மொழி, வாழ்க்கை, விருது, life style, sad on அக்டோபர் 20, 2009 | 36 மறுமொழிகள் »
வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல..
தொலைபேசி உரையாடல் -1
நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா?
எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க?
நான்:அடலேறு பேசறங்க…
எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா?
நான்: இல்லங்க என் பேரு அடலேறு..
எதிர்முனை:என்ன அடலொரு ஆ..
(டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க)
அலோவ் அடலொரு சொல்லுங்க , எந்த ஏரியா நீங்க?
நான்:நான் கோடம்பாக்கம் ..,வீட்ல [...]
நதி பார்த்தல்
Posted in Girl, கவிதை, தமிழ், நினைவு, புனைவு, குறிச்சொல் இடப்பட்டது அடலேறு, உருவகம், புனைவு, பெண், பேச்சிலர், வாழ்க்கை on அக்டோபர் 5, 2009 | 14 மறுமொழிகள் »
படாரென்று மூடப்பட்ட சாளரத்தின்
வழியே பெறுக்கெடுத்து ஒடுகிறது
நதியொன்று…
எங்கெல்லாமோ முடிக்கிவிடப்பட்ட நதியின் திசை
தினமும் காலையில் கண்சிமிட்டுகிறது
எதிர் வீட்டு நாய் குட்டியாய்
பின்பு ஒரு நாள்
காலஎந்திரம் வழியே கல்லூரியின்
இரண்டாம் வருட செய்முறை தேர்வு
முடிந்து திரும்புகையில்
கண்டுபிடித்தேன் நதியை
‘நியூட்டனின் மூன்றாம் விதியில்’
அடுத்த வருடம் எழுதும்
கவிதையின் பனிரெண்டாவது
வரியின் எச்சம் இங்கு மீந்து கிடப்பதால்
நதியின் அசூயை விருப்பமானது தான் என்பேன்
இருந்தாலும் ஒரே ஆதங்கம்,
கடல் சேரும் வரை நிறைய பேரால்
கண்டுபிடிக்க முடிவதில்லை
நதியின் திசையும் அதன் நோக்கமும்
If you enjoyed this post, make sure you subscribe to my [...]
கொஞ்சம் காதலித்து பார்
Posted in Adaleru, love, scribblings, அடலேறு, காதல், தமிழ், நினைவு, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, காதல், காதல் புதினம், தமிழ், நினைவு, புனைவு, பேச்சிலர், வாழ்க்கை, life style, love on செப்டம்பர் 26, 2009 | 43 மறுமொழிகள் »
முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா?
அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ?
அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ?
அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா ?
இரவு முழுக்க [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-4
Posted in Adaleru, Imagination, life, love, கவிதை, காதல், நட்சத்திரப் பதிவு, நினைவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அன்பு, கவிதை, காதல், நினைவு, புனைவு, வாழ்க்கை, வாழ்த்து, life style, love, poem on ஆகஸ்ட் 22, 2009 | 28 மறுமொழிகள் »
எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள்.
எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு
என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி
காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும்
சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின்
நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில்
தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் கலங்கிய கண்களோடு
என் மேலிரண்டு சட்டை [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-1
Posted in Adaleru, Imagination, life, love, கம்ப்யூட்டர், கவிதை, காதல், மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, காதல், கிறுக்கல், சோகம், நினைவு, புனைவு, பேச்சிலர், மொக்கை, வாழ்க்கை, love, sad on ஆகஸ்ட் 5, 2009 | 8 மறுமொழிகள் »
அவள் புகைப்படம் பார்த்தே ஆக
வேண்டும் என்ற கன நேரத்தில்
பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல்
கண்டுபிடித்து , அவள் கணவனுடன்
எடுத்துக்கொண்ட புகைபடங்களை
திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின்
அணைந்து போனது மின்சாரம், அவசரமாய்
கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த
காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு
காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து
தட்டு கழுவி உண்டு முடித்த பின்
நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
நட்பாகி போனேன்
Posted in Adaleru, Friendship, கவிதை, நட்பு, வாழ்த்து, குறிச்சொல் இடப்பட்டது அன்பு, கவிதை, கிறுக்கல், நினைவு, வாழ்க்கை, Friendship, life style, poem on ஏப்ரல் 16, 2009 | 16 மறுமொழிகள் »
பேச்சுலர் வாழ்க்கை
Posted in வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது பேச்சிலர், வாழ்க்கை, life style on ஜனவரி 22, 2009 | 10 மறுமொழிகள் »
பேச்சிலர் இந்த வார்த்தைய உச்சரிக்கும் போதே முன்னால் பேச்சிலர்களுக்கு இந்நாள் பேச்சிலர் பத்தி ஒரு பெரிய பிம்பம் விழுகும் அது என்னன்னா ( தம் , தண்ணி , தேவை இல்லமா ஊர் சுத்தறது) இப்படி அடுக்கீட்டே போவாங்க ஆனா பேச்சிலர் உண்மை நிலை என்ன?
தனக்கும் , தன்ன சுத்தி இருக்கவங்களுக்கும் தன்னால முடிஞ்ச எதாவது செய்யனும்னு தான் எல்லா பேச்சுலர்ஸ்மே ( சென்னை,மதுரை,பெங்களூர்,மும்பை, டெல்லின்னு ) வீட்ல [...]
தேவதைகளின் கவிதைகள்
Posted in Adaleru, love, காதல், தமிழ், குறிச்சொல் இடப்பட்டது காதல், வாழ்க்கை on அக்டோபர் 23, 2008 | 4 மறுமொழிகள் »
இன்று எதோ அவசரமாக அலுவலகம் கிளம்புகையில்
உனக்கு முத்தம் தர மறந்ததால்,
“இன்னைக்கு முழுவதும் என்னை நினைக்காமல் இரு “
என்றாய் !! அடி போடி ஒரு நாள் முழுவதும் எப்படி
சுவாசிக்காமல் இருப்பது.
*************************************
உன்மீது கொண்ட காதல் சிறு வயது
கணக்கு பாடத்தையும் பொய்யாக்கி போட்டது ,
“எத்தனை முறை உன்னை சிந்தித்து சிந்தித்து
செலவு செய்தாலும் உன்னை பற்றிய நினைவுகள்
பெருகி கொண்டே தான் இருக்கிறது”
பிறகு எப்படி பழனிசாமி வாத்தியார் நடத்திய
செலவழித்தால் குறைந்து போகும்
என்ற கூற்றை நம்புவது
**************************************
எல்லாரையும் ஒரே மாதிரியாகவும்
என்னை மட்டும் ” ஒரு ” மாதிரியாகவும்
ஏன் [...]

















