பள்ளி முடிந்து வரும்
மாலை நேரங்களில் எனக்கான
நொறுக்குத்தீனி
எடுத்து வைப்பாயே
அதற்காகவேனும்
எனக்கான தட்டு கழுவியும்
சட்டை தேய்தும் பின்
நவீனத்துவ அன்பு
காட்டுவாயே
அதற்காகவேனும்
எங்க அண்ணா பின்னிவிடற
ஜடையே அழகு தான்
என செல்வியிடம்
சொல்லி சிரிப்பாயே
அதற்காகவேனும்
கோபத்தின் உச்சத்தில்
போடா கழுதை என
சொல்லிவிட்டு வேகமாய்
வாசல் பக்கம் ஒடிப்போவாயே
அதற்காகவேனும்
அதிகாலை
தூக்க பொழுதுகளை
காதுக்குள் மையிலிறகு
நுழைத்து எழுப்புவாயே
அதற்காகவேனும்
அத்திலிச்சி பூனைக்கு
வயிறு வலிக்கிறதென
விக்ஸ் ஆக்ஸன் 500
மாத்திரையை பாலில்
கலந்து வைத்தாயே
அதற்காகவேனும்
என்னுடைய சட்டயை
அணிந்ததுக்காய் திட்டு
வாங்கியபடியே
பொத்துக்கொண்டுவரும்
அழுகையை அடக்க முயல்வாயே
அதற்காவேனும்
எதற்காகவேனும்
கடவுளிடம் சண்டையிட்டாவது
பிறந்துவிடு அடுத்த ஜென்மத்திலும்
என் அடங்காபிடாரி தங்கச்சியாக
நன்றி: இப்பதிவு யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது
If you enjoyed this post, make sure you [...]
‘வாழ்த்து’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
அடங்காபிடாரி
Posted in Adaleru, Sister, அடலேறு, அனுபவம், கவிதை, நட்சத்திரப் பதிவு, நட்பு, நினைவு, பள்ளி, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது அண்ணா, அனுபவம், அன்பு, தங்கச்சி, தமிழ், வாழ்க்கை, வாழ்த்து, life style, thanks on நவம்பர் 6, 2009 | 41 மறுமொழிகள் »
தீபாவளி காதல்
Posted in Adaleru, Imagination, diwali, festival, love, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, நினைவு, வாழ்த்து, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, கவிதை, காதல், தீபாவளி, நினைவு, வாழ்த்து, diwali wishes, love, poem on அக்டோபர் 13, 2009 | 34 மறுமொழிகள் »
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
அழகிய வலை பூ (பதிவர்) விருது
Posted in Adaleru, Award, Friendship, தமிழ், தொடர் பதிவு, நட்பு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, அன்பு, தமிழ், வாழ்த்து, விருது on செப்டம்பர் 21, 2009 | 10 மறுமொழிகள் »
அழகிய வலை பூ விருது வழங்கிய வாணிக்கு நன்றிகள்.
இந்த விருதை வல்லிய சுந்தர குட்டன் சுட்ட பழத்துக்கும் ,
புன்னகை இளவரசி அக்கா உமாவுக்கும்,
புதின தாரகை ஜானுவுக்கும் அளிப்பதில் பெரு உவகை கொள்கிறேன்.
கடைசி பக்க கிறுக்கல்கள்-4
Posted in Adaleru, Imagination, life, love, கவிதை, காதல், நட்சத்திரப் பதிவு, நினைவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அன்பு, கவிதை, காதல், நினைவு, புனைவு, வாழ்க்கை, வாழ்த்து, life style, love, poem on ஆகஸ்ட் 22, 2009 | 28 மறுமொழிகள் »
எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள்.
எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு
என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி
காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும்
சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின்
நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில்
தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் கலங்கிய கண்களோடு
என் மேலிரண்டு சட்டை [...]
தேவதையின் பிறந்தநாள்
Posted in காதல், வாழ்த்து, குறிச்சொல் இடப்பட்டது பிறந்தநாள், வாழ்த்து, birthday on அக்டோபர் 17, 2008 | 14 மறுமொழிகள் »
இன்றைய வானிலை நிலவரம்
பார்த்தாயா “இன்று தென்றல் வீசுமாம்…
இன்றைய நாளை பார்த்து மற்ற
364 நாட்களுக்கும் பொறாமை…
பூக்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன
இன்று எப்படியாவது உன் கூந்தலில்
சூடி விடப்பட வேண்டும் என்று …
உன் வீட்டு கண்ணாடி இன்று தன்னை
அழகு படுத்தி கொள்கிறது
அழகியான நீ இன்று பேரழகியாய்
அதன் முன்பு நிற்க்கையில்
உடைந்து விடாமல் இருக்க ..
இன்று நீ உடுத்தப்போகும் உடை
பெட்டியில் உள்ள மற்ற உடைகளை
பார்த்து கேலி செய்கிறது…..
இன்று நீ நடக்கப்போடும் பாதை
தனக்கு தானே அழகு வர்ணம்
புசிக்கொள்கிறது உன்னை வரவேற்க..
இன்று நீ பயணம் செய்யும் பேருந்துக்கு
ராஜ [...]

















