சென்னையில் வேலைக்கு சேர்ந்த நாட்கள் அவை. பின்னிரவில் சக்கையாய் பிழியப்பட்டு வேலையில் இருந்து வருவேன். நாங்கள் ஆறு பேர் அந்த அறையில் தங்கியிருந்தோம்.மிக குறைவான சம்பளம் எப்படி பிடித்து வைத்தாலும் இருபதாம் தேதிக்கு மேல் கையில் காசு இருக்காது.அன்று இரவு கடைசியாகத்தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன். யாரிடமும் காசு இல்லை நண்பர்கள் அனைவரும் கடைசியாக இருந்த காசில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டனர். மதியமும் சாப்பிடவில்லை பசி கண்ணை கட்டியது. மிக சோகமாக இருந்தது.யாரிடமாவது காசு இருக்கிறதா என்றதற்கு அனைவரும் [...]
‘Adaleru’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
சங்க(ம)ம் சந்திப்பு
Posted: December 27, 2010 in அடலேறு, சந்திப்பு, தமிழ், நட்பு, பதிவர் சந்திப்பு, Book Releaseகுறிச்சொற்கள்:Adaleru, அனுபவம், அன்பு, சிறுவன், தமிழ் ஸ்டுடியோ, நினைவு
கொலுவில் வீற்றிருக்கிறாள் காதலி
Posted: அக்டோபர் 10, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பெண், முத்தம், festivalகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, உருவகம், கவிதை, காதல், நவராத்திரி, பெண்
அழகான கொலு பொம்மைகளை பார்த்து கை தட்டி குதுகலிக்கிறாய் நீ உன்னை ஏன் கொலுவில் வைக்கவில்லை என்று குழம்பிப்போகின்றன பொம்மைகள் –0@0– நவராத்திரி கொலுவில் தேவதை பொம்மைகள் வைக்கிறார்களாம். பிறகு உன்னை எப்படி விட்டு வைத்தாள் ஜானகி ஆண்டி –0@0– நவாராத்திரி என்றாலே திருவிழாவும்,சுண்டலும். சுண்டல் என்றாலே கொலுவும்,பொம்மைகளும். மொம்மைகள் என்றாலே நீயும், உன் பட்டாம்பூச்சி சுடிதாரும் தான் வந்து நிற்கிறதென் மனதில் –0@0– தேவதைகள் எல்லாம் வைத்த கொலுவில் அழகான பொம்மையை அப்சரஸ் தேவதை தொட்டதால் [...]
கனவுகளால் ஆனவள்
Posted: செப்டம்பர் 10, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, தமிழ், புனைவு, பெண்குறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, கவிதை, புனைவு, பெண்
கனவுகளால் ஆனவளை வார்த்தைகளால் ஆனவளை சந்தித்த அதே பேருந்தில் இன்று சந்தித்தேன். கண்ணை மூடி கனவு கொண்டிருந்தாள். என்னை பற்றி அவள் கனவு என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில்அவளையே உற்று நோக்கினேன், மெல்ல கண் திறந்தவள், இங்கே என்ன செய்கிறாய் என்றாள்? எனக்கு கனவுகளே வருவதில்லை என்றேன், இந்தா பிடி ! என மூன்று மூட்டை கனவுகளை கொடுத்தனுப்பினாள். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீடு சேர்ந்தேன், முதல் மூட்டை பிரித்து மூன்றாம் கனவை எடுத்துப்பார்த்தேன் அதில் நீங்கள் [...]
கடைசி ஆண்
Posted: ஆகஸ்ட் 18, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, புனைவு, Girl, lifeகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, புனைவு
கருஞ்சிவப்பான இரவில் தீக்கிரையாக்கினாள் மதுரையை கையில் சிலம்பு தகிக்கிறது ஆண்களற்ற உலகமாய் மாற சாபமிடுகிறாள் விதை கிழிபட்டு மரிக்கின்றனர் அனைவரும் படக்கென போர்வை நீக்கியவள் விந்து வற்றிப்போன இரவில் என்னை புணர சொல்கிறாள் நானோ இப்பூமியின் கடைசி ஆண்
பிறந்த நாள்
Posted: ஆகஸ்ட் 13, 2010 in Adaleru, அடலேறு, பதிவர்குறிச்சொற்கள்:Adaleru, அன்பு, பிறந்தநாள்
இன்று எனது பிறந்த நாள். பள்ளிக்கூட நாட்களில் பல பிறந்தநாட்களை வீட்டில் இருந்து கொண்டாடி உள்ளேன். காலை எழுந்ததும் அம்மாவின் முத்தமும் அவள் செய்யும் வடையும் பாயாசத்திற்குமாகவே பிறந்தநாட்கள் அடிக்கடி வராதா என் காத்திருந்த நாட்கள் நிறைய உண்டு.எஙகள் பள்ளியில் பிறந்தநாளன்று யூனிபார்ம்களுக்கு விடை கொடுத்துவிட்டு புத்தாடைகள் அணிந்துகொள்ளலாம். பிறந்த நாட்களில் கூட வறுமை காரணமாக புத்தாடை அணியாமல் வந்த பால்ய நண்பர்களை விளிம்பு நிலையில் இருந்து நினைத்துப்பார்க்கிறேன்.பிறந்த நாள் வருவதற்கு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்களை [...]
நிலா பார்த்தல்
Posted: ஆகஸ்ட் 5, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, புனைவுகுறிச்சொற்கள்:Adaleru, கவிதை, புனைவு
சத்தம்மின்றி கசிந்து கொண்டிருந்தது இரவு, வெளியெங்கும் பெய்ய தொடங்கியது அயோடைட் மழை , ஏணியில் ஏறிகொண்டிருக்கிறான் பூமியின் கடைசி மனிதன், நாய்களற்ற தெருவில் குரைத்துக்கொண்டிருக்கின்றன எலக்ட்ரானிக் பொம்மைகள் , எடையற்று காற்றில் மிதந்து கொண்டிருக்கிறேன் நான் , “நிலவிற்கு வருக” பெயர் பலகையை துடைத்துக்கொண்டிருக்கிறாள் யாருமற்ற அனாதை சிறுமி.
பிரிவின் வலி
Posted: ஜூலை 1, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், நினைவு, பள்ளி, பிரிவு, பெண், வாழ்க்கை, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, கவிதை, காதல், சோகம், நினைவு, லகர தமிழச்சி, வாழ்த்து
எப்படியும் தொடங்கி விடுகிறது நீயில்லா தனிமையின் இரவுகளும் அதன் பின்னான வெறுமையின் வியர்வை துளிகளும் உன் அளவான சிரிப்பும் பேருந்து பயணங்களில் தோள் சாய்ந்து தூங்குவதும் நீ வைக்கும் தலைகீழ் ” ப “ வடிவிலான மல்லிகை பூவும் , உன் நினைவுகளும், உனக்கான காதலும் இன்னும் நிறம் மாறாமல் இருக்கின்றன. நீ விட்டு சென்ற பிரிவின் வலியை பின்னிரவுகளில் நனைந்து போன என் தலையணையை கேட்டுப்பார். உனக்கான காதலும் கவிதையும் இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது குடைக்குள் இருந்து மழையை [...]
இப்படிக்கு உன் பிரியா-அறிவியல் புனைக்கதை
Posted: ஜூன் 17, 2010 in Adaleru, அடலேறு, அறிவிப்பு, அறிவியல் புனைக்கதை, கம்ப்யூட்டர், காதல், சிறுகதை, தமிழ், நட்சத்திரப் பதிவு, பிரிவு, புனைவு, பெண், Science Fiction, Short Storyகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, உருவகம், காதல், நினைவு, புனைவு, பெண், வாழ்க்கை, life style, love, Science Fiction
அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள் இழப்பை நான் உணரும் போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் … – பாப்லோ நெருடா மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் [...]
தனித்துவிடப்பட்ட பெண்மை
Posted: ஜூன் 2, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், பிரிவு, பெண், வாழ்க்கைகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, கிறுக்கல், சோகம், தமிழ், நினைவு, புனைவு, பெண், வாழ்த்து
என் அன்பின் விழிநிலைகளை நீ அறிந்ததே கிடையாது கோபமுற்ற பொழுதுகளில் என் எதிரிலேயே கிழித்துப்போடுகிறாய் உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை யாருமற்ற பின்னிரவுகளில் கன்னங்களில் வழிந்து கொண்டிருக்கிறது தனித்துவிடப்பட்ட என் பெண்மை எனதன்பை பார்க்காமல் போ , உணராமலும் போ, ஆனால் உனக்காக அன்பை கடைவைத்து கடைசிவரை காத்திருந்தேன் என்று மட்டும் அறியாமல் போகாதே
பிரிவின் முதல் வரி
Posted: மே 31, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பிரிவு, புனைவுகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, உருவகம், கவிதை, கிறுக்கல், நினைவு, life style, poem
நீண்ட ஈரமான கூதல் காற்று தேகம் நனைக்கும் பொழுதில் துரத்து ரயிலோசை காற்றில் கரைந்து போகிறது பள்ளி முடிந்து திரும்பும் மாலை நேர சிறுமிகளின் கைகளில் பட்டு தெறிக்கிறது வருடத்தின் முதல் மழைத்துளி சலசலக்கும் ஆற்று மணல் வெளியில் யாருமற்ற தனிமையில் நானிருக்கும் இந்த பொழுதில் சொல்லியிருக்கலாம் நீ நமது பிரிவின் முதல் வரியை

















