Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘love’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா?
அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ?
அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ?
அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா ?
இரவு முழுக்க [...]

முழு பதிவையும் வாசிக்க »

உறக்கம் களைந்த பின்னிரவின் முற்றுப்பெறாத வார்த்தை தரவு தளத்தில், வரிகள் கிடைக்காத விரக்தியின் கடைசியில் தொடங்கப்பட்டது உனக்கான இந்த கவிதை.
அலையென விரியும் மனதின் சுக்கான் பிடித்து இழுக்கும் வித்தை கற்றும்,வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கொண்டுவரும் பிரசாதமாய் கனவுகளுக்கான மஞ்சள் சுடிதார் அணிந்து என் அறை மேசைகளுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞானம் கற்றிருக்கிறாய்.
உனக்கென வேண்டாத நகத்தை கூட வெட்டாத எனக்காக இதுவரை “164″ முறை உணர்த்திவிட்டாய் நீ என்னை காதல் கொள்வதை. அவசரமாய் [...]

முழு பதிவையும் வாசிக்க »

எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள்.
எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு
என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி
காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும்
சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின்
நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில்
தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் கலங்கிய கண்களோடு
என் மேலிரண்டு சட்டை [...]

முழு பதிவையும் வாசிக்க »

இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்

அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்
எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்
நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்
ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்
செம்பட்டயன் என்றே அழைப்பார்
பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று
விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி
இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு [...]

முழு பதிவையும் வாசிக்க »

அவள் புகைப்படம் பார்த்தே ஆக
வேண்டும் என்ற கன நேரத்தில்
பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல்
கண்டுபிடித்து , அவள் கணவனுடன்
எடுத்துக்கொண்ட புகைபடங்களை
திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின்
அணைந்து போனது மின்சாரம், அவசரமாய்
கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த
காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு
காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து
தட்டு கழுவி உண்டு முடித்த பின்
நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

சாதரணமாகவே நீ வரும் கல்லுரி பேருந்து சற்று
கர்வத்துடன் தான் தார்சாலை வலம் வரும்
இன்று அந்த பேருந்துக்கு தலை கால் புரியாது
எப்போதும் ஒருவித ஆணவத்துடனேயே
என்னை முறைத்து பார்க்கும் உன் சுடிதார்
பட்டாம்புச்சிகள் இன்று அதற்கு என்னை கண்டால்
இன்னும் கொஞ்சம் கொழுப்பு ஏறி தான் போகும்
இன்று நீ உடுத்த போகும் புது உடை உன் உடல்
தீண்டின போதை தெளிய நாளை இரவு கூட
ஆகலாம்.
என்னை பார்க்க தாமதாய் வருவது தவிர்க்க
மணி பார்க்க நீ பயன்படுத்தும் கை கடிகாரம்
என்னமோ நீ [...]

முழு பதிவையும் வாசிக்க »

நான் மகிழ்ச்சியாய் இருக்கும் ஒவ்வொரு தருணமும் உன்னயே நினைத்து கொள்கிறேன், உன்னை நினைக்கும் ஒவ்வொரு தருணமும் நான் மகிழ்ச்சியாகவே இருப்பதாய் உணர்கிறேன்.
காரணமே இல்லாமல் உன்னை கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் போல் உள்ளது அதற்காக வேணும் கொஞ்சம் என்னுடன் சண்டை போடேன்.
உலகின் மிக அழகான கவிதை புத்தகம் ஒன்று என் அறையில் உள்ளது. அதில் அனைத்து பக்கத்திலும் உன் பெயரே நிறைந்து உள்ளது.
நீ போடும் கோலத்தை போல் எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என [...]

முழு பதிவையும் வாசிக்க »

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

முழு பதிவையும் வாசிக்க »

பின் செல்!! நீ தான் என் உயிர் என்று சொல்.
போட நாயே என்பாள். புன்னகை புரி!!!
கனவுகளில் காதலியை தேடு.
நிஜத்தில் அவள் கனவுகளில் முழ்கி போ.
கவிதை வரை. காவியம் படை. அவளுக்கு தூது
அனுப்பு. கற்பனையில் கரைந்திடு புத்தகம் தலை
கீழாய் படி!! தலையனை உடன் பேசு !!!
தியானம் செய் !! கடவுளை காண்!!!
கண்டால் வரம் கேள் அவளின் சுடிதார் பூவாக மாற!!!
காரணம் இல்லாமல் சிரி!! காதலை உணவாக உட்கொள்!!!
கொட்டும் பனியில் உரைந்திடு!! தனி அறையில் சத்தமிட்டு அழு [...]

முழு பதிவையும் வாசிக்க »