தூக்கம் தொலைத்த இரவில் எப்போதும் சாலையில் உறங்கும் ஒருவனை கண்டேன் பல்வேறு கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக்கொண்டிருந்தான் கவிதைகளை எப்படி பிடிக்கிறாய் என்றதற்கு இரவுகளில் கவிதை பிடிப்பது எளிது என்றான் இரவு என்பதே அவளின் நினைவு சிகரெட் தனிமை அவளின் நினைவு தவிப்பு கோபம் அவளின் நினைவு கவிதை கண்ணீர் அவளின் நினைவு தயக்கம் வெறுமை அவளின் நினைவுகளுடே கலந்திருந்தவனுக்கு போத்தல் சாராயத்தை ஊற்றிக்கொடுத்த பின் முனகதொடங்கினான் கடவுள் காதல் கலவி [...]
‘poem’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
கடவுள் காதல் கலவி
Posted: ஜூன் 4, 2010 in கவிதை, நட்பு, பிரிவு, ரயில் பயணம்குறிச்சொற்கள்:சோகம், தமிழ், நினைவு, பெண், love, poem, sad
பிரிவின் முதல் வரி
Posted: மே 31, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பிரிவு, புனைவுகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, உருவகம், கவிதை, கிறுக்கல், நினைவு, life style, poem
நீண்ட ஈரமான கூதல் காற்று தேகம் நனைக்கும் பொழுதில் துரத்து ரயிலோசை காற்றில் கரைந்து போகிறது பள்ளி முடிந்து திரும்பும் மாலை நேர சிறுமிகளின் கைகளில் பட்டு தெறிக்கிறது வருடத்தின் முதல் மழைத்துளி சலசலக்கும் ஆற்று மணல் வெளியில் யாருமற்ற தனிமையில் நானிருக்கும் இந்த பொழுதில் சொல்லியிருக்கலாம் நீ நமது பிரிவின் முதல் வரியை
எனதன்பின் பூவிதழ்
Posted: April 28, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, பள்ளி, புனைவு, பெண், பொது, வாழ்த்து, Girl, Imagination, life, love, scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், சோகம், தமிழ், நினைவு, புனைவு, பெண், பேச்சிலர், மொழி, life style, love, poem, sad
பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]
மூன்று முத்தம் தருபவள்
Posted: மார்ச் 17, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பள்ளி, புனைவு, பொது, முத்தம், வாழ்க்கை, Girl, Imagination, Kiss, life, love, school daysகுறிச்சொற்கள்:உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், தமிழ், நினைவு, பெண், பேச்சிலர், மொழி, வாழ்த்து, life style, love, poem
ஞாயிறு காலையில் நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும் ஒரு முத்தம் என மூன்று முத்தம் மட்டும் தரும் கொடுமைகாரி நீ. ——-0O0———- எப்போதோ நீ எழுதிய என் பேனாவில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் உன் வாசனையை ——-0O0———- எதற்கு பார்த்தாய் என்கிறாய் சும்மாதான் என்கிறேன் என்னை சும்மா சும்மா பாத்திட்டே இருக்க மாட்டயா டா என காதல் பேசி திரியும் இந்த அழகு பிசாசை என்ன செய்வது? ——-0O0———- மோகமுற்ற பொழுதுகளில் குகுருப்பாய் ஒரு பார்வை பார்த்து மடியில் [...]
யட்சி
Posted: மார்ச் 12, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், கவிதை, காதல், சந்திப்பு, தமிழ், நினைவு, புனைவு, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, உருவகம், கவிதை, காதல், சோகம், தமிழ், நினைவு, புனைவு, பேச்சிலர், மொழி, வாழ்க்கை, life style, love, poem, sad, thanks
இன்று காலை 48 ‘ A’ பேருந்தில் சாம்பல் நிற யட்சியை பார்த்தேன் அதன் அழகு வனப்பானதும் வெள்ளை பூவின் வாசனையை தனதண்டையிலும் வைத்திருந்தது யட்சிகளை பேருந்தில் காண்பது இதுவே முதல் முறை அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும் தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது யட்சியின் கண்கள் வழியே நீளும் கரங்களில் என்னை விடுவித்துக்கொள்ள திரும்பும் போது பார்த்தேன் யட்சி என்னை உயிருடன் தின்று கொண்டிருந்தாள் ———-oO0————- யட்சியின் குட்டியூன்டு இதயம் வெதுவெதுப்பாகவும் எனக்கு ஏற்ற இடமாகவும் [...]
மரணம்
Posted: மார்ச் 7, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, பொது, வாழ்க்கை, வாழ்த்து, Girl, Imaginationகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, உருவகம், கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, பெண், வாழ்த்து, life style, love, poem, sad
உறுதி செய்யப்படாத இரவொன்றில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என் மரணம் மரணத்தின் நீட்சி அறையெங்கும் விரவிக்கிடக்கின்றது நிசப்த இரவுகளின் மத்தியில் தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறது மனம் இறப்பதற்கான காரணங்களை மனதின் மரணத்திற்கும் உடலின் மரணத்திற்கும் பிண்டம் மட்டுமே எச்சம் எச்சத்தை எண்ணிக்கொண்டிருக்கும் அதிகாலையில் தட்டி எழுப்பி சொன்னார்கள் நான் இறந்து விட்டதாய்
நீண்ட முத்தம்
Posted: பெப்ரவரி 24, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், புனைவு, முத்தம், Girl, Kiss, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, கவிதை, காதல், தமிழ், புனைவு, பெண், முத்தம், love, poem
யாருமற்ற கறுகறுத்த பின்னிரவுகளில் கவிதை வரிகள் எளிதில் கிடைத்து விடுகின்றன நீ இருக்கும் இரவுகளின் நீட்சி நவீனத்துவ விரிப்புகளில் சிக்கி என்னை ஆகடியம் பண்ணுகிறது நீண்ட அமைதியில் எப்போதும் என்னை நோக்கியே முடுக்கி விடுகிறாய் உனதன்பின் ஸ்பரிசங்களை தினசரி மதிய உணவிலும் அடுத்தடுத்த அழை பேசி விசாரிப்புகளிலும் வேலைக்கு சென்ற காலை பொழுதுகளில் விரிப்புகளை உதறுகையில் இருக்கலாம் கடைசி இரவில் நீ கொடுத்த நீண்ட முத்தமும் , எழுதி முடிக்காத சில கவிதை வரிகளும். If you [...]
தர்க்கத்தின் முரண்பாட்டு வரிகள்
Posted: ஜனவரி 13, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, வாழ்க்கை, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, உருவகம், ஊடல், கவிதை, காதல், நினைவு, புனைவு, பெண், மொழி, வாழ்க்கை, life style, love, poem
உனக்கென படைக்கப்பட்ட இரவுகளின் தர்க்கம் நீண்டு கொண்டே செல்கிறது அழுத்தம் தாங்காமல் புரண்டு படுக்கிறேன் நவீனத்தின் நீட்சியாக எடுத்துக்கொள் நகக்கண் வழியே என் சதைப்பிண்டத்தை வெளியேறா நித்திய ஒப்பந்ததின் கையெழுத்து பிரதிகளை,ஊடலின் திறவுகோலால் மூடி ஆழியின் மையத்தில் எறிந்து விட்டுப்போ மூழ்கி, தத்தளித்து ஒதுங்கி பின் கரைசேரட்டும் நமக்கான பிரியங்களும் தர்க்கத்தின் முரண்பாட்டு வரிகளும் If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
கனவுகளின் விற்பனை பிரதிநிதி
Posted: ஜனவரி 8, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, Girl, Imagination, life, love, scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், நினைவு, புனைவு, பெண், வாழ்க்கை, life style, love, poem
மெல்ல கீழுதடு கடிப்பாய் கண்களை சுருக்குவாய் நகங்களினால் பற்களை தேய்பாய் தேவையற்ற சண்டையிடுவாய் என்னை விட நாய்குட்டிக்கு தான் காதல் அதிகமென வாதாடுவாய் இப்படி ஏதேனும் ஒன்றில் உட்புகுந்து அன்றைக்கான கனவின் பிம்பங்களை எடுத்துக்கொண்டு மெல்ல வீடு சேர்வேன் நான் அன்றைய இரவின் கனவுக்காக If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
புத்தக வெளியீடு
Posted: December 17, 2009 in Award, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கம்ப்யூட்டர், கவிதை, காதல், சிறுகதை, தமிழ், நட்பு, நினைவு, பதிவர், வலை பக்கம், வாழ்க்கை, வாழ்த்து, Book Release, Friendship, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:அனுபவம், அன்பு, அறிவிப்பு, உருவகம், கவிதை, காதல், காதல் புதினம், தமிழ், நினைவு, பெண், மொழி, வாழ்க்கை, வாழ்த்து, விருது, Friendship, life style, love, poem
அனைத்து நண்பர்களுக்கும், இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“ மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna [...]

















