‘sad’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

 தூக்கம் தொலைத்த இரவில்  எப்போதும் சாலையில் உறங்கும் ஒருவனை கண்டேன் பல்வேறு கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக்கொண்டிருந்தான் கவிதைகளை எப்படி பிடிக்கிறாய் என்றதற்கு இரவுகளில் கவிதை பிடிப்பது எளிது என்றான் இரவு என்பதே  அவளின் நினைவு சிகரெட் தனிமை அவளின் நினைவு தவிப்பு கோபம் அவளின் நினைவு கவிதை கண்ணீர் அவளின் நினைவு தயக்கம் வெறுமை அவளின் நினைவுகளுடே      கலந்திருந்தவனுக்கு போத்தல் சாராயத்தை  ஊற்றிக்கொடுத்த பின்     முனகதொடங்கினான் கடவுள் காதல் கலவி [...]

பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]

இன்று காலை 48 ‘ A’ பேருந்தில் சாம்பல் நிற யட்சியை பார்த்தேன் அதன் அழகு வனப்பானதும் வெள்ளை பூவின் வாசனையை தனதண்டையிலும் வைத்திருந்தது யட்சிகளை பேருந்தில் காண்பது இதுவே முதல் முறை அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும் தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது யட்சியின் கண்கள் வழியே நீளும் கரங்களில் என்னை விடுவித்துக்கொள்ள திரும்பும் போது பார்த்தேன் யட்சி என்னை உயிருடன் தின்று கொண்டிருந்தாள் ———-oO0————- யட்சியின் குட்டியூன்டு இதயம் வெதுவெதுப்பாகவும் எனக்கு ஏற்ற இடமாகவும் [...]

உறுதி செய்யப்படாத இரவொன்றில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என் மரணம் மரணத்தின் நீட்சி அறையெங்கும் விரவிக்கிடக்கின்றது நிசப்த இரவுகளின் மத்தியில் தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறது மனம் இறப்பதற்கான காரணங்களை மனதின் மரணத்திற்கும் உடலின் மரணத்திற்கும் பிண்டம் மட்டுமே எச்சம் எச்சத்தை எண்ணிக்கொண்டிருக்கும் அதிகாலையில் தட்டி எழுப்பி சொன்னார்கள் நான் இறந்து விட்டதாய்

கவுண்டர் காட்டுக்கு கதிரறுக்க  போனவளே மத்தியானம் ஆச்சுதே இந்த மாம(ன்) மேல நெனப்பிருக்கா உச்சி பொழுதாச்சுதே உசுரு நீ வந்துருவன்னு கண்ணு முழிச்சு காத்திருக்க படுத்தபடியே நம்மூட்டு எறுப்புக்குதா சோறு வெக்கற போதையில அடிபட்ட காலுக்கு வருத்தப்படாத மூணே மாசத்துல சரியாகி போகுமுன்னு சொல்லிப்புட்டா மருத்துவச்சி அடிபட்ட நேரத்தவிட என்னக்காக வேல செஞ்சு நீ வூடு வந்து சாயும் போது எ(ன்) ஒடம்பு முழுக்க ரணம் கண்டு போச்சுதடி ஓரே நாளுள உன் நிறம் மங்கி போச்சுதடி என் [...]

இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள். பாடல்: வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்னெதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன் ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள் விளக்கம்: ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து [...]

வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல.. தொலைபேசி உரையாடல் -1 நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா? எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க? நான்:அடலேறு பேசறங்க… எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா? நான்: இல்லங்க என் பேரு அடலேறு.. எதிர்முனை:என்ன அடலொரு ஆ.. (டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க) அலோவ் [...]

உறக்கம் களைந்த பின்னிரவின் முற்றுப்பெறாத வார்த்தை தரவு தளத்தில், வரிகள் கிடைக்காத விரக்தியின் கடைசியில் தொடங்கப்பட்டது உனக்கான இந்த கவிதை. அலையென விரியும் மனதின் சுக்கான் பிடித்து இழுக்கும் வித்தை கற்றும்,வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கொண்டுவரும் பிரசாதமாய் கனவுகளுக்கான மஞ்சள் சுடிதார் அணிந்து என் அறை மேசைகளுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞானம் கற்றிருக்கிறாய். உனக்கென வேண்டாத நகத்தை கூட வெட்டாத எனக்காக இதுவரை “164″ முறை உணர்த்திவிட்டாய் நீ என்னை காதல் கொள்வதை. அவசரமாய் கொஞ்சம் அவசியமாய் விரல் பற்றி [...]

அவள் புகைப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்ற கன நேரத்தில் பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல் கண்டுபிடித்து , அவள் கணவனுடன் எடுத்துக்கொண்ட புகைபடங்களை திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின் அணைந்து போனது மின்சாரம், அவசரமாய் கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து தட்டு கழுவி உண்டு முடித்த பின் நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது. If you [...]

பின் செல்!! நீ தான் என் உயிர் என்று சொல். போட நாயே என்பாள். புன்னகை புரி!!! கனவுகளில் காதலியை தேடு. நிஜத்தில் அவள் கனவுகளில் முழ்கி போ. கவிதை வரை. காவியம் படை. அவளுக்கு தூது அனுப்பு. கற்பனையில் கரைந்திடு புத்தகம் தலை கீழாய் படி!! தலையனை உடன் பேசு !!! தியானம் செய் !! கடவுளை காண்!!! கண்டால் வரம் கேள் அவளின் சுடிதார் பூவாக மாற!!! காரணம் இல்லாமல் சிரி!! காதலை உணவாக [...]