குங்குமசிமிழின் அடைபட்டிருந்த
நத்தை ஒன்று வெளியேறி
எனக்கான இடம் கொடு என்கையில்
சம்மதிப்பதாய் பாவனை செய்து
நாட்காட்டி தேதி கிழித்த பின்
சிலந்தி வலையில் மாட்டி விடுவீர்கள்
மீண்டு எழுகையில் நவயுக
பிரிதி எய்து அனைத்தின்
சாராம்சம் நீயென போதை
ஏற்றி பின் வசை பாடி
யாருமற்ற தனிமையின் பின்னிரவில்
தேனீக்கள் கூட்டமாய் கொட்டும்
என பயமுறுத்தி மீண்டும்
சிமிழிக்குள் அடைத்த பின் வீரமாய்
தடவிக்கொள்வீர்கள் இல்லாத மீசையை
நல்லாயிருக்கு ………
LikeLike
/நவயுக
பிரிதி எய்து அனைத்தின்
சாராம்சம் நீயென /
அர்த்தம் புரிய வில்லை , விளக்கினால் ஆனந்தம்.
/யாருமற்ற தனிமையின் பின்னிரவில்/
தனிமை என்றாலே யாருமற்றது தானே, யாருமற்ற தனிமை என்று தனியாக கூற வேண்டுமா?
LikeLike
ஒன்னுமே புரியலையே!
–சாம்ராஜ்
LikeLike
கவிதையின் மூலம் நீங்கள் சொல்ல வந்த செய்தி நன்றாக புரிகிறது…
ஆனால் எந்த சம்பவத்தை நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்றுதான் தெரியவில்லை…
(அப்படி ஏதேனும் உள்ளதா…?..recession மாதிரி தெரியுது…)
LikeLike
பின் நவீனத்துவ கவிதையா…
கீழே நீங்க இதுக்கு விளக்கமும் தரனும்.
LikeLike
நன்றிங்க பிரியன்,புலம்பேர்,சாம்ராஜ், மாரி மற்றும் குந்தவை
@புலம்பெயர்
தனிமை என்றாலே யாருமற்றது தானே, யாருமற்ற தனிமை என்று தனியாக கூற வேண்டுமா?
புதிய இடத்தில் புதிய முகங்கள் பல இருந்தும் பேசாமல் இருக்கும் தனிமைக்கும், நம் வீட்டில் யாருமில்லாத போது இருக்கும் தனிமைக்கும் உள்ள வித்தியாசம் போல தான் இது.
@மாரி-முத்து
சம்பவம் இல்லை நண்பா
@குந்தவை
நவீனம் எல்லாம் ஒன்றும் இல்லைங்க குந்தவை, இது ஒரு பெண்ணியம் சார்ந்த குறியீட்டு கவிதை அவ்வளவே
LikeLike
சிமிழிக்குள் அடைத்த பின் வீரமாய்
தடவிக்கொள்வீர்கள் இல்லாத மீசையை//
இன்று பலரின் மீசைகள் இப்படிதான் படமெடுக்கின்றன..
LikeLike
சுதந்திரம் தருவது போல் தந்து பறிக்கப்படும் இன்றைய பெண்களைப் பற்றிய கவிதை அருமையாக இருக்கிறது .
LikeLike
நன்றிங்க படைப்பாளி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க jyothsna 🙂
LikeLike
இப்பொழுது கொஞ்சம் புரிகிறது. Jyothsnaஅவர்களுக்கு நன்றி. ஆசை காட்டி மோசம் செய்வது போல் பாவமான செய்கை வேறில்லை. நல்ல கருத்தாழம் கொண்ட பதிவு. வாழ்த்துக்கள்.
–சாம்ராஜ்.
LikeLike
நன்றிகள் உங்களுக்கும், Jyothsna க்கும்
LikeLike
யாவரும் இருந்தும் தனிமை
யாவரும் இல்லாத தனிமை
தனிமையை பௌதீக ரீதியாக மட்டும் அவதானிகின்றீர்களா, அடலேறு….
LikeLike
ஆமாங்க புலம்பெயர்
LikeLike
இப்பதான் புரிந்தது. நிஜமாகவே நன்றாக இருக்கின்றது.
LikeLike
very nice adaleru…how are you?
LikeLike
கவிதை அர்த்தம் புருஞ்சுது.. ஆனா எல்லா வார்த்தை/ வாக்கியங்களுக்கான அர்த்தமா புரியல..
நீ காலேஜ் பசங்களுக்கு படம் நடத்துற, நான் எல்.கே.ஜி பையன்.. வேற என்ன சொல்ல ?
LikeLike
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அடலேறு !
LikeLike