Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

angel1

சாதரணமாகவே நீ வரும் கல்லுரி பேருந்து சற்று
கர்வத்துடன் தான் தார்சாலை வலம் வரும்
இன்று அந்த பேருந்துக்கு தலை கால் புரியாது

எப்போதும் ஒருவித ஆணவத்துடனேயே
என்னை முறைத்து பார்க்கும் உன் சுடிதார்
பட்டாம்புச்சிகள் இன்று அதற்கு என்னை கண்டால்
இன்னும் கொஞ்சம் கொழுப்பு ஏறி தான் போகும்

இன்று நீ உடுத்த போகும் புது உடை உன் உடல்
தீண்டின போதை தெளிய நாளை இரவு கூட
ஆகலாம்.

என்னை பார்க்க தாமதாய் வருவது தவிர்க்க
மணி பார்க்க நீ பயன்படுத்தும் கை கடிகாரம்
என்னமோ நீ அதை தான் பார்ப்பதாய்
நினைத்து கொண்டு இன்றும் என்னுடன்
சண்டைக்கு வரும்

நேற்றே என் கண்களுக்கு பாடம் எடுத்து விட்டேன்
உன்னை கண்டதும் உன் பின்னாடியே செல்லாமல்
சற்று நேரமாவது என் உடன் இருக்க.. எனக்கு நம்பிக்கை
இல்லை உன்னை கண்டதும் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றும்.

பலூன் கடைக்காரர் எப்போதோ சொல்லி விட்டார்
தேவதையின் பிறந்தாள் பலூகளுக்கெல்லாம் காசு வாங்குவதில்லை என்று.. உனக்காக உடைபடும் பலூன்களுக்கு தான் எவ்வளவு சந்தோசம்..

எனக்கு தெரியும் இன்று உன்னை காணும் பிரம்மிப்பு நீங்குவதற்கே எனக்கு பல நாட்கள் ஆகும்…..
இன்று உன்னை பார்த்தவுடன் எனக்கே ஒரு சந்தேகம்
பிறந்த நாளன்று உன்னை தேவதை என்று குறைத்து மதிப்பிட்டேனோ என்று உண்மையை சொல் நீ தேவதைகளின் தேவதைதானே

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

roadleaf

நான் மகிழ்ச்சியாய் இருக்கும் ஒவ்வொரு தருணமும் உன்னயே நினைத்து கொள்கிறேன், உன்னை நினைக்கும் ஒவ்வொரு தருணமும் நான் மகிழ்ச்சியாகவே இருப்பதாய் உணர்கிறேன்.

காரணமே இல்லாமல் உன்னை கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் போல் உள்ளது அதற்காக வேணும் கொஞ்சம் என்னுடன் சண்டை போடேன்.

உலகின் மிக அழகான கவிதை புத்தகம் ஒன்று என் அறையில் உள்ளது. அதில் அனைத்து பக்கத்திலும் உன் பெயரே நிறைந்து உள்ளது.

நீ போடும் கோலத்தை போல் எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என சொல்ல முடிவதில்லை உன் முத்தமும்.

அழகு போட்டிக்கு நீ எதற்கு போகிறாய் பேசாமல் நீ சுருட்டி போட்ட உன் கூந்தல் முடியை அனுப்பு அது போதும்.

எனக்கு இருக்கும் ஆசையெல்லாம் இரண்டே இரண்டு தான்
உன்னை காதலிக்க வேண்டும் மற்றும் உன்னை
இன்னும் அதிகதிகமாய் காதலிக்க வேண்டும்.

உனக்கு மழை பிடிக்குமா இல்லை தூறல் பிடிக்குமா
என்றாய் மழை என்றேன்…
உனக்கு வானவில் பிடிக்குமா இல்லை வண்ண நிலவு பிடிக்குமா என்றாய் வானவில் என்றேன்…..
உனக்கு கவிதை பிடிக்குமா இல்லை கனவு பிடிக்குமா
என்றாய் கனவு என்றேன்….
உனக்கு மயிலிறகு பிடிக்குமா இல்லை மண்பாண்டம் பிடிக்குமா என்றாய் மண்பாண்டம் என்றேன்…
இவைகள் மட்டும் பிடிக்க காரணம் என்ன என்றாய் ???
பெரிதாக வேறொன்றும் இல்லை அனைத்துமே உன்னை நினைவு படுத்துகின்றன அதனால் தான் என்றேன்.
ஓடி வந்து இறுக கட்டிக்கொண்டு காதருகே கேட்டாய்

உனக்கு முத்தம் பிடிக்குமா இல்லை மோகம் பிடிக்குமா என்று
நான் இரண்டும் என்றேன்.

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

நட்பாகி போனேன்

first1
natpagi-ponen-1
natpagi-ponen-22
natpagi-ponen-31
natpagi-ponen-4
natpagi-ponen-51
natpagi-ponen-6
natpagi-ponen-71
natpagi-ponen-8
natpagi-ponen-9
natpagi-ponen-101
natpagi-ponen-last

நட்பாகி போ

adaleruwordpresscom-fs1

adaleruwordpresscom-fs2

adaleruwordpresscom-fs3

adaleruwordpresscom-fs4

adaleruwordpresscom-fs5

adaleruwordpresscom-fs6

adaleruwordpresscom-fs7

adaleruwordpresscom-fs8

adaleruwordpresscom-fsl

tamil-letters1

வழகொடிந்து போன சில வழக்கங்களை பற்றியோ அல்லது வார்த்தைகளைப் பற்றியோ ஒரு தொடர் பதிவு எழுத அழைப்புன்னு சொல்லி “பெரிய மனதுடன் அழைப்பை ஏற்றுக்கொள்வார் என்று நம்பி அழைக்கிறேன் ” ன்னு கண்டிப்பா அழைப்பை ஏற்க்க வைத்த தோழி குந்தவைக்கு நன்றி .

நான் குந்தவை மாதிரி நிறைய யோசிக்கல ஏன்னா இங்க வழகொடிந்து போன பெயரை வெச்சு தான வலைபதிவுல பொழைப்பே நடத்துற.

இனி வழகொடிந்து போன வார்த்தைகளைப் பற்றி பாக்கலாம்

அ) அடலேறு :- அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம்.
அது மட்டும் இல்லாம ஜல்லிகட்டுல யாருமே அடக்க முடியாத காளைக்கு அடலேறுன்னு சொல்லுவாங்க. அதுக்குன்னு நீங்க காளையா சிங்கமான்னு கேக்க கூடாது. அது மட்டும் இல்லாம போரில் புற முதுகு காட்டாதவன் அடலேறு.
ஆனா இப்ப சிங்கத்த யாருமே அடலேறுன்னே கூப்டறது இல்ல

ஆ) சோறு : இப்ப எல்லாரும் சாப்பாடுன்னு தான் சொல்றாங்க ஆனா அதோட உண்மையான சொல் பதம் வந்து சோறு தான். அம்மா சோறு போடுங்கன்னு இப்ப யாரும் சொல்றது இல்ல , சாப்பாடு போடுங்கன்னு தான் சொல்றாங்க. சோறுங்கர
வார்த்தயே இப்போது குறைஞ்சு போயிருச்சு
இ) தமக்கை, தமையன் :- இந்த தமையன் தமக்கை மிக அழகானது தமிழ் வார்த்தை ஆனா இத எல்லாருமே மறந்துட்டாங்க.

அது மட்டும் இல்ல நம்ம மக்கள் பழமொழிய கூட தப்பா தான் அர்த்தம் கொல்றாங்க

எடுத்துக்காட்டா கீழ இருக்க பழமொழிய பாருங்க உங்களுக்கே புரியும்

திரித்த பழமொழி :- ” ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்”

திரித்த பொருள் :- ஆயிரம் பேரை வைத்தியத்தில் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன்

உண்மை பழமொழி :- ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்

உண்மை பொருள் :- முதல் காலத்துல நம் தமிழனின் மருத்துவ முறை சித்த வைத்தியம், சித்த வைத்தியதிற்கு முக்கியமான பொருள் முலிகை வேர்கள் தான் , அதன் காரணமாக வந்தது தான் மேற்குறிய பழமொழி அதாவது எவன் ஒருவன் தன்னிடம் ஆயிரம் வேரை கொண்டுள்ளானோ அவன் தான் அரை வைத்தியன்னு பொருள் .

திரித்த பழமொழி :- களவும் கற்று மற

திரித்த பொருள் :- தீய பழக்கமான களவையும் நாம் கற்று மறந்து விட வேண்டும்

உண்மை பழமொழி :- களவும் கத்தும் மற

உண்மை பொருள் :- களவு – திருடுதல் கத்து- பொய் சொல்லுதல்
தீய பழக்கமான திருடுதல் பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில்
மறக்க வேண்டும் என்பதே. இப்படி நம் மக்களே பழமொழியின் அர்த்தத்தை மாற்றும் போது “வழகொடிந்து போன சில பழமொழிகள்” தலைப்புல ஒரு தொடர் பதிவு வந்தாலும் வரலாம்.

இதோட நான் முடிக்க கூடாதாம், மூன்று பேரை வேற மாட்டிவிடனுமாம். அதுக்குத் தான் நிறைய சங்கத்து மக்கள் இருக்காங்களே, அதனால

மோகன் : போன தடவ என்ன தொடர் பதிவுல மாட்டி விட்டாரு அதனால இந்த தடவ மோகன் மாட்ட வெச்சுட்ட. புதுசா இன்னொரு வலை பக்கம் அரம்பிட்சு அதிலும் கலக்குறாரு கண்டிப்பா நம்ம தொடர் பதிவுல கலந்துக்குவாரு

இனிய தோழி பிரியா : அழகான பதிவுகள் மூலமா தன்னோட வலை பக்கத்தின் எண்ணிக்கயை தாறு மாற உயர்தரவங்க நிட்சயமா இந்த அழைப்பை ஏத்துக்குவாங்கன்னு நம்பற.

உமா : குறுகிய காலத்துல அதிகமாக பதிவுகள் அனைத்தும் அவங்க புன்னகை மாதிரியே அழகான பதிவுகள் எழுதி தனக்குன்னு ஒரு ரசிகர் வட்டத்தை வெட்சுருக்கவங்க. நிச்சயமா இந்த தொடர் பதிவுல கலந்துக்குவாங்கன்னு நம்பலாம்

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

bachelor
பேச்சிலர் இந்த வார்த்தைய உச்சரிக்கும் போதே முன்னால் பேச்சிலர்களுக்கு இந்நாள் பேச்சிலர் பத்தி ஒரு பெரிய பிம்பம் விழுகும் அது என்னன்னா ( தம் , தண்ணி , தேவை இல்லமா ஊர் சுத்தறது) இப்படி அடுக்கீட்டே போவாங்க ஆனா பேச்சிலர் உண்மை நிலை என்ன?

தனக்கும் , தன்ன சுத்தி இருக்கவங்களுக்கும் தன்னால முடிஞ்ச எதாவது செய்யனும்னு தான் எல்லா பேச்சுலர்ஸ்மே ( சென்னை,மதுரை,பெங்களூர்,மும்பை, டெல்லின்னு ) வீட்ல கட்டி குடுத்த கூட்டாசோரோட ரயில் ஏறாங்க, ஆனா வெளி ஊருக்கு கிளம்பும் போது எல்லாருமே கேட்கறது இது தான் , ஏண்டா மூஞ்சிய உம்ம்முன்னு வெச்சுருக்கன்னு ? அந்த உம்முக்கு பின்னாடி பல அர்த்தங்கள் இருக்கு அத நிறைய பேரு கண்டுக்கறதே இல்ல.

அதுல முதல்ல வர்றது சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளந்த ” எங்க ஏரியான்னு ” நாளைல இருந்து சொல்ல முடியாது , இது வரைக்கும் கூட சுத்திட்டு இருந்த ஸ்டாலின் கூடவோ, பாலாஜி கூடவோ, இல்ல நாய் கோபாலோ கூடவோ நாளைல இருந்து சுத்த முடியாது , அதுக்கு மேல இது வரைக்கும் கரெக்ட் பண்ணி வெச்ச ஒத்த ஜடை மீனாவோ, எதிர் வீட்டு கீதாவோ, இப்படி இத்தியாதி இத்தியாதி விசயங்களை எல்லாம் நாளைல இருந்து சுத்தமா மறந்தர வேண்டியது தான்,அது எல்லாத்துக்கும் மேல அம்மாவோட அன்பு , அப்பாவோட திட்டு, அண்ணனோட சண்டை , அக்காவோ தங்கச்சியோ கைல சாப்பாடு இது எல்லாத்தியும் ஒரே நாள்ல விடனும்னா எப்படி இருக்கும், இது மாதிரி சென்னை போன நம்ம கிராமத்து (வயசான) பிரண்ட் எழுதின கடிதாசி கவிதை ரொம்ப நாளுக்கு முன்னாடி எழுதுனது இருந்தாலும் நல்லா தான் இருக்கு நீங்களும் படிச்சு பாருங்க

நித்தமும் நான் தவிச்சு இருப்ப உன்னையே தான் நினைச்சுருப்ப,

இங்க சென்னைல காலைல ஆச்சுதுன்னா வேலைக்கு தான் வண்டி வரும் ,

9 மணிநேர வேலை முடிஞ்சு திரும்பி வருகையில உன் நினைப்பும் தான் கூட வரும் ,

சரியாதான் சாப்புடற இருந்தாலும் ஒடம்பு ஏற இல்ல,

தினமும் தான் உன்ன நினைச்சுருக்க இருந்தாலும் காதல் மாற இல்ல,

அங்க உன் முரட்டு அப்பன் எப்படி இருக்கா ?

முனுகாம அழுகும் உன் அம்மாவும் எப்படி இருக்கா ?

எப்பவும் முறைச்சு பாக்கும் உன் தம்பி தான் முழுவதுமா வளந்து நிப்பா!

எப்பவுமே கண்ணுக்குள்ள வந்து நிக்கற இருந்தாலும் அங்க கூட தான் தள்ளி நிக்கற ,

மறக்காம போன் பண்ணு , வெள்ளிகிழமை ஆட்சுதுன்னா

உன் பச்சை தாவணிக்கு தான் தடை பண்ணு ,

கண்டவனும் பாத்திடுவா, காதும் காதும் வெச்சு பேசிடுவா ,

மொத்தமா உன் அழக கண்ணாலயே அளந்திடுவா,

அடுத்த திங்களுக்கு தான் வந்திடுவ, சொல்லி வெய்யு உங்க வீட்ல பந்தலிட,

அடியேய் வெளையாட்டுக்கு தான் சொல்லிபுட்ட ,வெவகாரம் ஆக்கி புடாத,

ஆனாலும் உனக்காக தான் ரயிலேருவ ஊருக்கு தான் வந்து சேர,

வந்ததும் உனக்கு காதல்ல வெளங்காத அர்த்தமெல்லாம் வெளங்க வெக்கற !!!

பேச்சுலர் வாழ்க்கைல நம்ப பேச்சுலர் லைப் ஸ்டைலே வேற! எந்த முடிவு எடுத்தாலும் அது நம்ம முடிவு தான் யாருகிட்டயும் கேட்க வேண்டியது இல்ல. எல்லாரும் பேச்சிலர் பொறுப்பு இல்லாதவன்னு தான் திட்டறாங்க ஆனா வாங்குன சம்பளம் முழுசும் வீட்டுக்கு குடுத்துட்டு மாச கடைசில ஒரு டீ தம்மோட தன்னோட ஒரு நாள் முழுசும் ஓட்டற பேச்சிலர் பத்தி எத்தன பேருக்கு தெரியும் கைல காசு இல்லாதப்ப “எங்கடா சாப்பிட போகலாம் ?” அப்படின்னு ஒரு கேள்வி வந்தா எல்லாரும் மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டு கோடம்பாக்கத்துல கெளம்பி அப்படியே ஊர்ந்துபோய் டி.நகர்ல கொஞ்சநேரம் கலர் பார்த்துட்டு, ஏதாவது தள்ளுபடி கடைல வெறும் வேடிக்கை மட்டும் பாத்துட்டு மறுபடியும் பஸ்சு புடிச்சு வீட்டுக்கு 11 மணிக்கு வந்தாலும் கவலையில்லை! பசங்களுக்கு எல்லாமே ஒன்னுதான்!

இதுல்ல என்ன ஸ்பெசல்னா நம்ம இவ்ளோ சம்பாதிக்கறோம் இப்ப நம்ம கைல காசே இல்லன்னு நம்ம பசங்க ஒரு நாலு கூட நினைக்க மாட்டங்க , வீட்டுக்கு தான் எல்லாத்தையும் கொடுத்துருக்கம்ன்னு நிம்மதியா டீய மட்டும் குடிச்சுட்டு சந்தோசமா தூங்குவாங்க நம்ம பேச்சுலர்ஸ்.இருந்தாலும் ரூம் பசங்க எல்லாரும் ஊருக்கு போய்ட்டா அந்த தனிமை தான் ரொம்ப கொடுமைன்னு எல்லா பேச்சுலர்ஸ்ம் சொல்றாங்க,ஆமா அது உண்மை தான் யாருமே உணர முடியாத தனிமை எல்லா பேச்சுலர்ஸ் வாழ்கையுழும் இருக்கு , இது மட்டும் இல்ல இன்னும் எவ்வளவோ இருக்கு பேச்சுலர்ஸ் பத்தி பேச அத பத்தி விரிவா இன்னொரு பதிவு பின்னாடி போடற. இவ்ளோ தெரிஞ்சதுக்கு அப்பறமும் யாரும் பேச்சுலர்ஸ் பத்தி தப்ப பேசாதீங்க !!!

டிஸ்கி: இந்த பதிவு பொட்டி தட்டற IT பேச்சுலர்ஸ்க்கு பொருந்தாது
If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

adutha1
unnai1
suvasik1
If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

va-penny-karanam-illamal-kadhalikkalam
உன்னை நினைத்து உருகியது இல்லை,
உனக்காக கவிதை புனைந்ததும் இல்லை,
உன்னுடைய நினைவுகள் என்னுடைய தூக்கத்தை மறக்கடித்ததும் இல்லை !!
அழகு சிலையாம் நீ ! ஆனால் உன்னுடைய அழகு என்னை சலனப்படுத்தியது கிடையாது,
எல்லாரையும் திமிராக பார்க்குமாம் உன் சுடிதார் பட்டாம் பூச்சிகள் ! !
எனக்கு அந்த பட்டாம் பூச்சிகள் நிறம் கூட நியாபகத்தில் இல்லை,
படுக்கையில் உன்னை நினைத்து தூக்கம் வராமல் புரண்டது கிடையாது,
கனவுகளில் உன்னை தொலைத்து தேடியதும் கிடையாது,
இப்படி எந்த காரணம் இல்லாமல் வருவதற்கு பெயர் தான் காதலம்
அதனால் தான் சொல்கிறேன்
” வா பெண்ணே காரணம் இல்லாமல் காதலிக்கலாம் “
If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

me-and-my-cycle

அன்புள்ள அப்பாவிற்கு,
உங்கள் அன்பு மகன் எழுதும் கடிதம்.
அப்பா சிறு வயதில் நான் உங்களுடன் கழித்த  தருணங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.தினமும் அதிகாலையில்  சைக்கிளின்  முன் bar  என்னை உட்கார வைத்து வாய்க்காலுக்கு  என்னை கூட்டி சென்றதை மறக்க முடியுமா ??அப்போதெல்லாம் எனக்கு பச்சை தண்ணீரில் குளிக்க பிடிக்காது ஆனால் நீங்கள் லாவகமாக அடிக்கும் நீச்சலில் மதி மயங்கி நானும் அந்த பச்சை தண்ணீரில்  நீச்சல் கற்றுக்கொள்ள அடம் பிடித்தது  நியாபகம் இருக்கிறதா? 

எப்போதும் கண்டிப்புடன் கோபமாகவே இருக்கும் உங்கள் முகம் உங்கள் தோளிற்கு மேல் வந்ததும் என்னுடைய கோரிக்கைகள் முழுவதும் அம்மா முலமாகவே உங்களிடம் வரும்.  ஒவ்வொரு தடவையும் அது எனக்கு தேவை தான என்று அறிந்து தான் முடிவு எடுப்பீர்கள். எடுத்த  பொருளை எடுத்த இடத்தில் வைப்பது முதல் நேரம் தவறாமல் கடைபிடிக்கும் உங்களின் ஒவ்வொரு பழக்கமும் தான் இன்று என்னை முழுதுமாக அக்கிரமித்து உள்ளது.
+2 படிக்கும் போது  மறைத்து வைத்திருந்த என்னுடைய காதல் கடிதத்தை அம்மா உங்களிடம் காட்டிய போதும் கூட மிக மிக மென்மையாக எனக்கு புரிய வைத்தீர்களே  அப்பா.எப்போதும்  காலையில் லேட்ஆக  எழும்  போதே உங்களின் திட்டுக்களுடன் தான் எழுவது   வழக்கம் ஆனால் பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து இருக்கும் இப்போதெல்லாம் நினைத்து பார்க்கிறேன் ,  காலை 8 மணி வரை நிம்மதியான உறக்கம் , ஆனாலும் உங்களின் திட்டுக்கள்  இல்லாமல் இந்த காலைகள் எனக்கு வெறுமையாகவே போகிறது. 
   
ஒவ்வொரு முறையும் நான் நெடுந்தூர ஓட்ட போட்டியில் ஜெய்க்கும் போதெல்லாம் என்னமோ  நீங்களே ஓடி ஜெய்த்தது போல பூரித்து போவீர்கள் ஆனால் அந்த பூரிப்பை கூட என்னிடம்  காட்டாமல் , அம்மா முலமாக தான் எனக்கு தெரியும் நீங்கள் பூரித்துப் போனது அதனால் உங்களிடம் பாராட்டு வாஙகி விட வேண்டும் என்றே   நான் ஓடி ஓடி வாங்கிய பதக்கங்கள் இன்று உங்கள் பெயரை தான் சத்தமிட்டு சொல்கிறது என் அறையின் மேசைக்குள் இருந்து.    

உங்களுடைய பிறந்தநாளை நீங்கள் கொண்டாடியதாக எனக்கு நியாபகமே இல்லை, இப்போது கூட உங்களுக்கு வாழ்த்து அட்டையாவது அனுப்ப நினைக்கிறேன் ஆனால் ” இதுக்கு போய் எண்டா காச செலவு” பண்ற என்ற திட்டு நிச்சயமாக வரும்
ஆனால் எனக்கு ஒன்று தான் புரியவே இல்லை அப்பா உங்களுக்கு என் மீது தான் இவ்வளவு பாசம் இருக்கிறதே ஆனால் அதை ஒரு முறை கூட நேரடியாக என்னிடம்  முழுமையாக காட்டவில்லயே ஏன் ???    

எனக்கு மட்டும் அல்ல என்னை போல நிறைய பேருக்கும் இப்படித்தான் ஒரு சந்தேகம்   “எல்லா அப்பாவுமே இப்படி தானா” ???

ஆனாலும்ஒன்றுசொல்கிறேன்அப்பா                                                                                                 
உங்களுக்கு ஒருமுத்தம் கொடுக்க ஆசை இந்த பிறந்தநாளுக்கு !!!                                         

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

இப்படிக்கு
உங்கள் அன்பு மகன்

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

பழைய பதிவுகள் »