அட்டைவனைப்படி அன்று பெல்கா தான் நாயை வாக்கிங் கூட்டிப் போக வேண்டும். போன வாரம் தான் இருபத்தி நான்காவது முறையாக அந்த அட்டவனையை திருத்தம் செய்தார்கள். பாத்திரம் கழுவுவதில் ஆரம்பித்து வாசலில் விழுகும் பனியை தள்ளுவது வரை இருவரும் சமமாக வேலையை பிரித்துக்கொண்டார்கள். "பனி தள்ளும் நேரம் வந்து விட்டது!! இந்த முறை நீ தான் போக வேண்டும்" என செர்கி சொல்லும் போது இருப்பதிலேயே மோசமான பாவனையில் முகத்தை வைத்திருப்பாள் பெல்கா. கனடா பனிப்பொழிவை பற்றிய... Continue Reading →
ரீவைண்ட் – 2022
நீ எங்கவேணாலும் போ. நீ எங்க போறயோ அங்க வெச்சு உன்ன செய்வ என 2022 கையில் உள்ள எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டு அடித்து துவைத்தது. அடியென்றால் கொஞ்ச நஞ்சமல்ல அடிச்சு அண்டர்வேருடன் ஓட விடுமே அப்படி ஒரு அடி. இந்த வருசத்த தாண்டிருவியா குமாரு என என்னையே நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவமானங்கள், புறக்கணிப்புகள், உறவு சிக்கல்கள் என ஒவ்வொரு ஐயிட்டமாக வருடம் முழுதும் கிடைத்து கொண்டே இருந்தது. அடிவாங்கி நிமிர்ந்து பார்பதற்குள் அடுத்த ஆக்ஷன்... Continue Reading →
துஷிதா
அவளை பார்த்தும் என்ன பேசபோகிறேன் என மனம் குழம்பியது. வைத்துக்கொள்ள வேண்டிய முக பாவங்களை படிமம் செய்து பார்த்தேன். உடல் மொழியை நிகழ்த்திப்பார்த்தேன். பேச வேண்டிய வார்தைகளை கலைத்து நேர்படுத்தினேன். வார்த்தைகள் ஒன்றன் மீது ஒன்றாக நீண்டிருந்தது. அனைத்தையும் அழித்துவிட்டு முதலிலிருந்து சுருக்கி பேசிபார்த்தேன். பிறகு அதையும் அழித்து பெயரை மட்டும் சொன்னால் போதும் என நிறுத்தினேன். பிறகு அதையும் அழித்து எப்படி இருக்க? சாப்டயா? என்ற கேள்விக்கான பதிலை மட்டும் உருவாக்கினேன்.
வலி
எப்போதும் போல ரேவதிக்கு காலை எழுந்திரிக்கும் போதே முடியாமல் போனது. நகர முடியாமல் படுக்கையிலேயே இருந்தாள். ஓட்டைகளால் நெய்யப்பட்டது போன்ற போர்வையும் பழைய கம்பளியையும் கனமாக இருந்தது. நீண்ட நாட்கள் துவைக்காததன் நெடி ஏறியது. சிறுநீர் உந்துதல் இருந்தது. ராசு இருந்தாலாவது கைத்தாங்கலாய் கூட்டிப்போவான். நாள் முழுதும் அவளுடன் இருப்பது இந்த படுக்கையும் போர்வையும் தான். இந்த ஆறுக்கு ஆறு இடமே அவளுக்கு போதுமாய் இருந்தது. யாராவது கொஞ்சம் தண்ணீரை வாயில் ஊற்றினால் தேவலாம் என இருந்தது... Continue Reading →
தற்கொலை-சிறுகதை
துல்லியமாக தெரியாத போது அதை விடுவிப்பது தற்கொலைக்கு சமம். எட்டு வருட பயிற்சியில் சொல்லிக்கொடுக்கப்பட்டது ஒன்று தான். கொல் இல்லை கொல்லப்படுவாய். கொல்லப்படுவதும் ஒருவித்தில் விடுதலை தான், கட்டற்றட்ட விடுதலை. ரத்தம் பனியில் மெல்லிய தீற்றலாக ஒடி சிகப்பு பனிக்கட்டியில் உறைந்து போவதை கற்பனை செய்யாமல் ஒருவன் இந்த மலைகளுக்கு கால் வைக்க முடியாது. மைனஸ் முப்பது டிகிரியில் மனம் அதன் உட்ச விழிப்பு நிலையிலிருக்கும், மேற்கிலிருந்து வரும் பனிக்காற்று நுறையீரலின் கடைசி அறை வரை செல்லும்... Continue Reading →
பாதுகாக்கப்பட்டது: செயலின்மையிலிருந்து விடுபடுதல்
சிறுகுறிப்புகள் ஏதும் இல்லை, ஏனெனில் இது ஒரு பாதுகாக்கப்பட்ட பதிவு.
காலம் கருணையுடன் இருப்பதாக
இது பழைய பதிவு. எழுதிய வருடம் சரியாக நினைவில் இல்லை. 2012 அல்லது 13 ஆக இருக்கலாம். பழைய டிராவ்டுகளை எடுக்கும் போது கண்ணில் பட்டது. . இந்த பயணங்கள் முழுதும், காலம் கருணையுடன் இருந்ததை நினைவுகூறுகிறேன். இவ்வருட தொடக்கத்திலிருந்தே நான் விரும்பியது ஒன்று தான் ” இந்த வடருடம் முழுதும் பயணங்களால் நிறைய வேண்டும் என்று”. என்னுடைய பயணம் என்பது அறை முன்பதிவு செய்து நான்கு சுவற்றுக்குள் அடைத்துக்கொள்வது அல்ல. மற்றும் என் பயணங்கள் முழுதும்... Continue Reading →
குரூகர் தேசிய சரணாலயம்
என்னளவில் 2019 சிறப்பான வருடம். தென் சீன கடலின் ஹாங்காங் தொடங்கி , தென் ஆப்பிரிக்கா வரை பயணம் செய்திருக்கிறேன். பவ்வேறு மனிதர்களும், நிலங்களும் என்னை கலைத்து ஒழுங்குபடுத்தியிருக்கிறது. காட்டுயிர்களின் மீதான காதலால் கூரூகர் சரணாலயம் பல வருடங்காளாக பயண திட்டதிலிருந்தது. நாம் National Geographic ல் பார்க்கும் பெரும்பால காட்சிகள் குரூகர், செரங்கட்டி, கலகாரி இவற்றின் ஒன்றில் தான் காட்சி படுத்தப்பட்டிடுருக்கும். இந்த பயண நாட்களை நினைத்துப்பார்க்கிறேன். வாழ்வின் சிறப்பான பயணங்களின் ஒன்று குரூகர். ஜோகேனஸ்பர்க்... Continue Reading →
அன்பும் காதலும் அமைதியும் உங்களை சூழ்வதாக.
அன்பின் பிரபஞ்சிதா, வெளியே வெள்ளை பூக்களாக பனி பெய்து கொண்டிருக்கிறது. ஜன்னலை சிறிதே திறக்கிறேன், பனிக்காற்று முகத்திலறைந்து பின் அறையெங்கும் விரவுகிறது. நான் யாரையும் ஏமாற்றவில்லை. யாருக்கும் தீங்கு நினைத்ததில்லை.ரத்தமும் சதையுமாக பதினான்கு வருடங்கள் காதலித்த பெண் நீங்கள். நினைவுகளுடன் கலந்த முதல் காதலி நீங்கள். உறவு முடிதலை இத்தனை கடுமையாக தான் சொல்லவேண்டுமா? நான் உங்களை ஒன்றும் செய்யவில்லையே பிரபஞ்சிதா.கொஞ்சம் சண்டை, திகட்ட காதல் என்று தானே இருந்தேன். அப்படி இருப்பதற்கு பெயர் தானே காதல்.... Continue Reading →
கற்பனைக்கு எட்டாத சிறுமி
நான்கு டிகிரியில் ஹாங்காங் உறைந்து கொண்டிருந்தது. ஒரு கவிதையை படிக்க குளிரும், தூவானமும், கருப்பு தேனீரைவிட வேறெதேனும் சிறந்த மனநிலையை தந்து விட முடியுமா என்ன? நீண்ட நாள்கள் கழித்து ஒரு கவிதை புத்தகத்தை படிக்கிறேன். ராஜேஷ் வைரபாண்டியனின் “ வேனிற் காலத்தின் கற்பனை சிறுமி” . ராஜேஷின் கவிதைகளில் நீண்ட நாட்கள் பயணிப்பதால் அவர் உருவாக்கும் சித்திரங்களின் ஜாலம் எனக்கு அத்துப்படி. நட்சத்திரங்களும், கனவுகளும், கற்பனை சிறுமிகளும், தேவதைகளும்,இரவும் , வண்ணத்துபூச்சிகளும், ஜூலியும் இல்லாமல் நிலாவின்... Continue Reading →
முன்னத்தி ஏர்
கலைஞரின் ஆளுமையை புரிந்து கொள்ள அவரின் எந்த காலத்தை பிரித்துபார்த்தாலும் ஒன்றை கவனித்திருக்கலாம் அவரின் ”நுண்ணுணர்வு“. நுண்ணுணர்வை பல வழிகளின் புரிந்துகொள்ளலாம் பொதுவாக நுண்ணுணர்வு என்பது செய்தியையோ, உணர்வுகளையோ சரியாக உள்வாங்குவதும் , மதிப்பிடுவதும் அதை இலகுவாக இன்னொருவர் மனதிற்கு பரிமாற்றம் செய்வதாகும். இன்று கலைஞரை பற்றி போற்றி சொல்லக்கூடிய எந்த நிகழ்வும் உண்மையாக அவரின் நுண்ணுணர்வை பற்றிய பாராட்டுகள் தான். அறிவுசார் நுண்ணுணர்வு கொண்ட ஒருவர் தான் சமூகத்தை முன்னகர்த்துகிறார். ஒரு சமூகம் முன்னகர்ந்ததை எப்படி அறியலாம்... Continue Reading →
முப்பதுகளின் தொடக்கம்
முப்பதுகளின் தொடக்கதிலிருக்கிறேன். கல்லூரி முடிந்து ஏறக்குறைய பத்தாண்டுகள் கடந்துவிட்டது. இருபதுகளில் இலகுவான இருந்தவைகள் சற்று சிரமமாக தெரிகிறது. காரணம் உடல்பருமன். கல்லூரியின் மாரத்தான் ஓட்டக்காரன் என நண்பர்களிடையே பேச்சுவாக்கில் சொல்வதையே கூட தவிர்க்குமளவு உடலை கெடுத்துவைத்திருக்கிறேன். பயணங்களின் மீது பெருங்காதல் கொண்டவன். இந்தியாவின் முதல் கிராமமான துர் துக் தொடங்கி கன்னியாகுமரி வரை பெரும்பாலான உணவுகளை கபளிகரம் செய்திருக்கிறேன் 😉 . பயணங்களில் சாப்பிடுவது போய் பிறகு சாப்பிடுவதற்காக பயணப்பட்ட பரமாத்மா நான். என் மனம் விரும்பிய... Continue Reading →
மண்ணின் மகத்தான ஆளூமை
2003ம் வருடம் இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் நரைத்த தாடியுடன் மேல் சட்டைக்கு பதில் ஒரு பச்சை துண்டை மட்டும் போற்றிக்கொண்ட மெலிந்த தேகம் கொண்ட ஒருவர் சாதரணமாக அமர்ந்திருந்தார்., பொள்ளாச்சி வட்டாரத்திற்கான நீர்பாசங்கள் குறித்து அரசுப்பள்ளி மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றைய விருது மேடையில் அவர் ஆற்றிய உரை பிரசித்தமானது. உரங்கள் , ரசாயனங்கள் மண்ணையும் மனிதர்களையும் எப்படி பாழாக்கியது, அதன் பின்னான அரசியல், கேவலமான உழல்கள் என அடுக்கிக்கொண்டே போனார். இரண்டு மணிநேரம் பேசவேண்டியதெல்லாம் பேசி ஓய்ந்தது... Continue Reading →
விளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்?
கோலாகலமாக நடந்து முடிந்தது ரியோ ஒலிம்பிக் .ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா ஒரு தங்கம் கூட வாங்கியதில்லை என்ற கசப்பான உண்மை தொடர்கிறது. தடகளத்தில் ஏன் இந்த முறையும் இந்தியா மண்ணை கவ்வியது ? ஊழல்,அரசியல் என்று அதரப்பழசான வார்த்தைகளையே சொல்லி தப்பிக்கபோகிறோமா? தோற்றுப்போன களத்தை ஆய்வு செய்யாமல் விடுவது அடுத்த தோல்வியின் முதல் படி. இந்த ஒலிம்பிக்கை கள ஆய்வு செய்வோம். இந்தியாவின் சார்பில் தடகள குழு தான் அதிகமான வீரர்களை அனுப்பியது 34 பேர்.... Continue Reading →
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்?
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? எழுத்தாளுரும் நண்பருமான அபிலாஷ் எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் என்பது பற்றி தன்னுடைய வலை பக்கத்தில் எழுதி இருந்தார். அதை பற்றிய என்னுடைய கருத்துகளை இங்கே பதிவிடுகிறேன். உளவியல் ரீதியாக ஒருவரை அணுக பிராய்ட் கண்களின் வழிதான் தொடங்க வேண்டும் என நினைப்பேன். இடியாப்ப சிக்கல்களுக்கு பிராய்ட் எப்போதும் ஒரு உளவியல் தீர்வை வைத்திருப்பார். எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பை வகைப்படுத்தினாலே ஒருவருக்கு எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டவரை பிடிக்கும் என்பதை ஓரளவு கண்டுகொள்ளலாம். ஒரு... Continue Reading →
தடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா
இன்னும் சில நாட்களில் தொடங்கப்போகிறது 2016 ஒலிம்பிக் திருவிழா. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் பங்களிப்பு எப்படி இருக்க போகிறது? அதிலும் குறிப்பாக தடகளத்தில் நிறைவேறாத நூறு ஆண்டுகளின் கனவை இந்த முறை இந்தியா எப்படி சரிகட்டப்போகிறது ? உலகின் மிகப்பெரும் மனித சக்தியை கொண்ட தேசம். கல்வி, விஞ்ஞானம்,தொழில்நுட்பம் ராணுவம் என தன்னிறைவை நோக்கி முன்னகரும் தேசம், 2020ல் வல்லரசாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளு விரும்பும் தேசம். அதன் நிறைவேறாத நூற்றாண்டு கனவு., உலக அளவில் தடகளத்தில் ஒரு... Continue Reading →
வீரப்பன் பிடியில் 14 நாட்கள்
கர்நாடகாவை சேர்ந்த பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர் - சேனானி இருவரையும் அரசு உயர் அதிகாரிகள் என நினைத்து வீரப்பன் கடத்திவிடுகிறார். தன்னார்வ வனவிலங்கு புகைப்படக்காரர்கள் எனத் தெரிய வந்ததும் வீரப்பனுக்கும் இருவருக்கும் நட்பு உருவாகிறது. காட்டுப் பறவைகள் குறித்து நிறைய விஷயங்களை இருவரிடமும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டு வீரப்பன் தெரிந்துகொள்கிறார். வீரப்பனுடன் இருந்த தங்கள் அனுபவத்தை ‘Birds, Beasts and Bandits: 14 Days with Veerappan’ என்னும் பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இது... Continue Reading →
பொள்ளாச்சி ரயில்
பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு ரயில் விட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் நேற்று தான் முதன் முதலில் பயணம் செய்தேன். கோவையிலிருந்து சென்னைக்கு வர ஏழு மணிநேரம் ஆனால் அதன் அருகாமை ஊரான பொள்ளாச்சியில் இருந்து வர பதினொன்றரை மணிநேரம். இருந்தாலும் எங்க ஊர் வண்டி எனும் சித்தாப்பில் ஏறிக்கொண்டேன். முதலில் வசீகரித்தது பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் அமைதி மற்றும் சுத்தம். ரயிலுக்கு கையசைக்கும் குழந்தைகள், மனிதர்கள் ஏறக்குறைய அருகி விட்டார்கள். அது வெரும் கையசைப்பு கிடையாது.... Continue Reading →
பெயர் மாற்றம்
இதுவரை அடலேறு பக்கம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த இந்த வலைபக்கம் இனி நிலன் பக்கங்கள் என்ற பெயரில் இயங்கும்.
பெருந்தலைவர்
நம் மண்ணின் மகத்தாக தலைவர் காமராஜரை பற்றின உரை. விருப்பமிருப்பவர்கள் கேட்கலாம். அரசியல் என்பதை தாண்டி ஒரு அருமையான உரை. சேர்ப்பு: காமராஜர் காலம் ஏன் பொற்காலம் https://www.youtube.com/watch?v=3pBg-RuRpQU