அவள்

நூற்றாண்டின் வலியை
அனுபவித்துவிட்டாள்
அவள்

உதிர்வ‌த‌ற்கு த‌யாராய்
திர‌ண்டிருக்கிறது
வருடத்தின் முதல் க‌ண்ணீர்துளி

சிற‌குக‌ள‌ற்ற‌ தேவ‌தை மெல்ல‌
நுழைகிறாள் தனி அறையில்

அவ‌ளின்
பேரிரைச்சல் க‌ண்டு
ந‌டுங்கிய‌ப‌டி வெளியேறுகிற‌து
அமைதியின் க‌டைசி சொல்

நீரால் சூழ்ந்த வீடு
உடைவது கண்டு
வீறிட்டு அழுகிறாய்
நீ

வெளிச்ச‌ம் க‌ண்டால்
ந‌டுங்குகிற‌து உன்னுடல்

இனி
உன் த‌லை பிடித்திழுக்கும்
கைக‌ளை கொண்டு
மெல்ல‌ வெளியேற‌லாம்
நீ

பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

10 thoughts on “அவள்

Add yours

  1. என்னை கொஞ்சம் பின் நோக்கி பார்கவைத்தது கவிதை, அது முழுக்க முழுக்க என் அனுபவமே !!…
    வாழ்த்துக்கள் தம்பி

    Like

பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.

Up ↑