கனவுகளால் ஆனவள்

கனவுகளால் ஆனவளை 

வார்த்தைகளால் ஆனவளை சந்தித்த

‌அதே பேருந்தில் இன்று சந்தித்தேன்.

கண்ணை மூடி கன‌வு  கொண்டிருந்தாள்.

என்னை பற்றி அவள் கனவு என்னவாக இருக்கும்

என்ற எண்ணத்தில்அவளையே உற்று நோக்கினேன்,

மெல்ல கண் திறந்தவள்,

இங்கே என்ன செய்கிறாய் என்றாள்?

எனக்கு கனவுகளே வருவதில்லை என்றேன்,

இந்தா பிடி ! என மூன்று மூட்டை

கனவுகளை கொடுத்தனுப்பினாள்.

தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீடு சேர்ந்தேன்,

முதல் மூட்டை பிரித்து மூன்றாம் கனவை எடுத்துப்பார்த்தேன்

அதில் நீங்கள் அனைவரும்

இந்த கவிதை படித்துக்கொண்டிருக்கிறீர்கள்

-அடலேறு 

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

6 thoughts on “கனவுகளால் ஆனவள்

Add yours

அடலேறு -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑